LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம்

உலகில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் தேச, மத, இன, மொழி, ஜாதி, பேதங்கள் அற்று வயதிற்கேற்பவும், தேவைகளுக்கேற்பவும், உணவு, உடை, இடம், கல்வி, தொழில், வாழ்க்கைத் துணை இவைகளைப் பெற்று, வாழும் திறமையறிந்து கூட்டுறவாக, ஒரே குடும்பத்தைப் போல் அன்போடும், பண்போடும் கடமையுணர்ந்து, கடமை புரிந்து, சமத்துவமாக, சுதந்திரமாக, ஆனந்தமாக, அமைதியாக வாழவேண்டும் என்பதே உலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். இக்காலத்திற்கும் எதிர்கால மனித இனத்தின் நல்வாழ்விற்கும் தேவையான, உயர்ந்த வாழ்க்கை முறையை - திட்டத்தை - வகுத்து, அதன் மூலம் இன்று மனிதரிடையே நிலவி வரும், அறியாமையால் பெருகும், கற்பனை மயக்கம், வறுமை பேத உணர்ச்சி இவைகளை ஒழித்து, என்றும், எங்கும், எல்லோரும் இயற்கையில் விளையும் துன்பங்களைக் குறைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். இதற்கு நாம் எடுக்கும் முயற்சி, வகுக்கும் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்:

1) மனித இன வாழ்விற்கும், இயற்கைக்கும் ஒத்த முறையில் அது இருக்க வேண்டும்.

2) மனித சமுதாயத்திற்குப் பொதுவாக இருக்கவேண்டும்.

3) சிரமமில்லாமல் அமுல் நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.

4) தொடர்ந்து பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

5) பல நாட்களாக உடற் கருவிகளை இயக்கிப் பழகிக் கொண்ட பழக்கங்களையும், பற்றுதல்களையும், கொள்கைகளையும் உடனே மாற்றவோ, விடவோ, விட்டுவிடச் செய்யவோ எளிதில் முடியாது. ஆகையால் படிப்படியாக அவசியமான மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். இந்த நோக்கத்துடனேயே, "உலக சமாதான திட்டம்" வகுக்கப்பட்டிருக்கிறது.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: World Peace   Mail Goal   Project   உலக சமாதான திட்டம்   லட்சியம்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.