LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஜம்மு காஷ்மீரில் சிந்துநதியின் மேலே புதிதாக கட்டப்பட்ட தொங்குபாலம் திறந்து வைப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிந்துநதியின் மேல் புதிதாக கட்டப்பட்ட தொங்கு பாலம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரின் லே என்ற இடத்தில் உள்ள சோக்லம்ஸர் கிராமத்தில் சிந்து நதியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 260 அடி நீளம் கொண்டதாகும். 

இந்த தொங்கு பாலத்தை இந்திய ராணுவத்தின் ஃபயர் அன்ட் ஃப்யூரி பிரிவினர் 40 நாட்களில் அமைத்து சாதனை படைத்து உள்ளனர். புதுமையான பொறியியல் முறைகள் மூலம், 500 டன் உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலம், நடுவில் தூண்கள் ஏதுமின்றி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லே-லடாக் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பாலத்திற்கு மைதிரி பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்கள் இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளனர். இந்த மைத்ரி பாலத்தை 89 வயதான ஓய்வு பெற்ற போர் வீரர் நெயிக் ஃபுங்சுக் ஆங்டஸ் திறந்து வைத்தார். 

சோக்லம்ஸர், ஸ்டோக் மற்றும் சுச்சோட் ஆகிய மூன்று பகுதி மக்களும் உதவும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அனைவரும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். 

by Mani Bharathi   on 03 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் முன்னோர்களைத் தேடி-  நூல் வெளியீடு எங்கள் முன்னோர்களைத் தேடி- நூல் வெளியீடு
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும்  ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார்  மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி
94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி! 94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி!
சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம் உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி
உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது
ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.