|
||||||||
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாறு |
||||||||
தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தோற்றம்: இது 1995 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 1ம் தேதி பேரா. ஜவாஹிருல்லா, பி.ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை வருடந்தோறும் பொதுகூட்டங்கள் நடத்தி வருவதோடல்லாமல் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறது. தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடை வழங்க போராடிய முஸ்லிம் இயக்கங்களுள் முதன்மையானதாக உள்ளது. சமுகப்பணிகள்: தமிழகம் முழுவதும் 99 அவசர ஊர்திகளுடன் சாதி,மத பேதமின்றி சேவையாற்றும் ஒரேஅமைப்பு இதுவாகும். தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் த.மு.மு.கவின் சமுகப்பணிகளை பாராட்டி, த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி பணியை வெகுவாக பாராட்டிய முதல்வர் தனது சொந்த செலவில் 2 அவசர ஊர்திகளை த.மு.மு.கவிற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது. நிதி உதவிகள்: ரம்ஜான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றன இரத்த தானம், ஏழைகளுக்கான இலவச திருமணம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. |
||||||||
by Swathi on 29 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|