LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

எழுமினெ மலேசியா-- உலகத் தமிழ் முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மே 3,4,5 ஆகிய தேதிகளில் சைபர் ஜெயா மெடிகல் யுனிவர்சிட்டி ஆப் மெடிகல் சயின்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மாநாட்டை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டான்ஸ்ரீ டத்தோ பாலன் தொடங்கி வைத்தார். மாநாட்டுத் தலைவரும், டிரா மலேசிய அமைப்பின் நிறுவனருமான சரவணன் சின்னப்பன் வரவேற்றுப் பேசினார்.

எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் மாநாட்டு நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
மாநாட்டில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர். வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்குவது என்பது மாநாட்டின் லட்சியம் ஆகும்.

22 நாடுகளைச் சேர்ந்த 370 க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தொழிலில் சிகரம் தொட்டவர்கள் மட்டுமின்றி ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

துறை வாரியாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு, வல்லுனர்களால் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. பெண் தொழில் முனைவோர் களுக்காக பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அழகுத்துறையில் வெற்றிகள் ஈட்டிய வித்யா விஷ்வேந்திரா மற்றும் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜி ஜெகதீசன் உரை நிகழ்த்தினர்.

இந்தியாவில் இருந்து மோகன் குமாரமங்கலம், பி.டி.ஆர். தியாகராஜன்,  மலேசியாவின் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா ஆகியோர் பேசினர். இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான மாஃபா நிறுவனத்தின் இயக்குனர் லதா பாண்டியராஜன், சித்த மருத்துவர் சிவராமன், உளவியல் வல்லுனர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசினர்.

இரண்டாம் நாள் இரவு விருந்தில் பங்கேற்ற அந்நாட்டு அமைச்சர் சிவராசா முக்கியப் பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

மூன்றாம் நாள் நிறைவு விழாவில் அமைச்சர் எம். குலசேகரன் கலந்து கொண்டு இருநாட்டு ஒருமைப்பாடு குறித்துப் பேசினார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் தொடர்புகள் விரிவடைந்தன. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட தொழில் வாய்ப்புகளை மேடையிலேயே அறிவித்தனர்.
100 க்கும் மேற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இறுதியில் உலக அளவில் தமிழர்களுக்கான வங்கி ஓன்றை உருவாக்கவும், வீட்டிற்கொரு தொழில் முனைவோரை உருவாக்கவும் எழுமின் அமைப்பு தொடர்ந்து செயல்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நிறைவு நாளில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தமிழர் திருநாள் நிகழ்வு வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

எழுமின் மலேசிய மாநாடு, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும்.

by   on 16 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.