LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்!

பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடலுக்கு, குஜராத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் கர்பா நடனம் ஆடினர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் நவராத்திரி  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நவராத்திரி விழா கொண்டாட்டம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. உலகின் பல இடங்களில் உள்ள குஜராத் மக்களும் நவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது பெண்கள்  பாரம்பரிய உடை அணிந்து கர்பா நடனம் ஆடி மகிழ்வார்கள். 

இது பற்றி பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தி மொழியில் ஒரு பாடல் எழுதியுள்ளார். 

 ‘கர்பா நடனம் உலகம் முழுவதையும் இணைக்கிறது.  அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. இயற்கையுடன் இணைய வைக்கிறது. கர்பா குஜராத்தின் வளம், கவுரவமான பாரம்பரியம், அடையாளம். ஏழை, பணக்காரர் அனைவருக்கும் கர்பா மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. மக்கள் நலத்தின் அடையாளமாக உள்ளது. 

கர்பா புல்லாங்குழல், மயில் இறகு போன்றது. கர்பா உண்மையானது, தாயின் அழகான குங்குமத்தைப் போன்றது, கர்பா என்றால் சக்தி, ஈடுபாடு’ 

இவ்வாறு பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

பிரதமர் எழுதிய, இந்த பாடலுக்கு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ‘அந்த் கன்யா பிரகாஷ் கிரஹ்’ என்ற பார்வையற்ற பள்ளி மாணவிகள் கர்பா நடனம் ஆடினர். இந்த நடனத்தின் வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்

"இந்த நடனம் எனது மனதை தொட்டுள்ளது. கர்பா கொண்டாட்டத்துக்கு இந்த மகள்கள் உயிர்  கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நவராத்திரி ஆசீர்வாதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டு உள்ளார்

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.