LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

3 ஆயிரம் ஆண்டு பழமையான தங்க ஆபரணங்களை கலிபோர்னியாவில் சோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கீழடியில் கிடைத்த 3 ஆயிரம் ஆண்டு பழமையான தங்க ஆபரணங்களை, கலிபோர்னியாவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  கிளை உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழி மதி,  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடியில் ஆற்றங்கரை நாகரீகத்தின் அடிப்படையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 2200 ஆண்டுக்கு முந்தைய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

இங்கு அகழாய்வு பணியைத் தொடரவும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவும், இங்கு சிறப்பாக பணியாற்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியில் தொடரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல், மதுரையை சேர்ந்த வக்கீல் பிரபாகர பாண்டியன் தாக்கல் செய்த மனுவிலும் அமர்நாத் ராமகிருஷ்ணனே ஆய்வை தொடர்ந்து நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்  மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘‘மத்திய அரசு 3 கட்ட ஆய்வுகளோடு முடித்துக் கொண்டது. தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 4ம் கட்ட ஆய்வுப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  5ம் கட்ட ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடந்த ஆய்வில் பானைகள், ஓடுகள், விலங்கின பொருட்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கிடைத்து உள்ளன. குறிப்பாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்க ஆபரணங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. 

இவற்றின் சரியான ஆண்டுகள் குறித்து அறிய கலிபோர்னியாவில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தங்க ஆபரணங்களை உடனடியாக கலிபோர்னியாவில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, அதன் அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.