|
|||||
பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்! |
|||||
பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்துள்ள ஜெயலலிதா சிலை, வேறு யார் மாதிரியோ உள்ளது என்றும் அதனால் சிலையை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றவில்லையே என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா முழு உருவச் சிலை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. நிச்சயமாக அந்தப் பணி நடைபெறும். இலங்கையில் சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய தண்டனை. வாழ்வத்காக, வழிதவறிச் சென்ற மீனவர்களை பிடித்துச் சிறையில் அடைத்து ரூ. 60 லட்சம் அபராதம் விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் ஹை கமிஷனை வைத்து வாதாடினோம். ஆனாலும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. ஆயுள் முழுவதும் மீன்பிடித்தாலும் அவ்வளவு பணம் கட்ட முடியாது. இதற்காக தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. மத்திய அரசும் இந்த மாதிரி செயலுக்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம். தண்ணீர் லாரி மற்றும் குடிநீர் கேன் ஊழியர்கள் போராட்டத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பிரதமரை முதல்வர் சந்தித்தபோது பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசியுள்ளார். பிரதமரும் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி இருக்கிறார். இது முன்னேற்றமான விஷயம். தமிழக அரசு விலை குறைப்பது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். |
|||||
by Mani Bharathi on 17 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|