LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!

பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது பற்றி தமிழக அரசு முடிவு எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: 

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்துள்ள ஜெயலலிதா சிலை, வேறு யார் மாதிரியோ உள்ளது என்றும் அதனால்  சிலையை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றவில்லையே என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா முழு உருவச் சிலை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச்  சிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. நிச்சயமாக அந்தப் பணி நடைபெறும்.

இலங்கையில் சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய தண்டனை. வாழ்வத்காக, வழிதவறிச் சென்ற மீனவர்களை பிடித்துச் சிறையில் அடைத்து ரூ. 60 லட்சம் அபராதம் விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. 

நாம் ஹை கமிஷனை வைத்து வாதாடினோம். ஆனாலும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. ஆயுள் முழுவதும் மீன்பிடித்தாலும் அவ்வளவு பணம் கட்ட முடியாது. இதற்காக தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

மத்திய அரசும் இந்த மாதிரி செயலுக்குக்  கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம். தண்ணீர் லாரி மற்றும் குடிநீர் கேன் ஊழியர்கள் போராட்டத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 

பிரதமரை முதல்வர் சந்தித்தபோது பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசியுள்ளார். பிரதமரும் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி இருக்கிறார். இது முன்னேற்றமான விஷயம். தமிழக அரசு விலை குறைப்பது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. 

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

by Mani Bharathi   on 17 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.