2019-ம் ஆண்டு நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு துறை ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நீட் தேர்வில் இடம்பெற்ற மொழிமாற்ற குளறுபடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில்,"மொழி பெயர்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும். பின்பு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இவ்வாறு சரி பார்த்தால் தான் மொழி பெயர்ப்பில் உள்ள பிழைகளை களைய முடியும் என தெரிவித்தது.
அதாவது தேசிய தேர்வுகள் முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, நாகேஷ்வரராவ் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர். வரும் 2019-ல் நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கண்டிப்பாக ஆங்கில புலமை இருக்க வேண்டும். இதனால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நீட் தேர்வை பொறுத்தவரை எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
|