கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களால் சுமார் 215 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.வின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதில் 77 சதவீதம், மோசமான வானிலையாலும், பருவநிலை மாற்றத்தினாலும் வீணாகி இருப்பதாக கவலை தெரிவித்து உள்ளது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடரின்போது ஏற்படும் சேதங்கள், வணிக ரீதியிலான பாதிப்புகள் போன்றவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஐ.நா. தெரிவித்து உள்ளது.
|