|
|||||
ஆண்களின் திருமண வயதை குறைக்கக் கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! |
|||||
ஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உள்ளது. ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18 ஆக குறைக்கக் கோரி அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும், ராணுவத்தில் சேர அனுமதி ஆகியன 18 வயதில் வழங்கப்பட்டு உள்ளது. எனவே தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது. இந்த மனு விசாரிப்பதற்குத் தகுதியற்றது என கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உள்ளனர். அத்துடன் மனுதாரரான அசோக் பாண்டேக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளனர். மேலும் 18 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. ஆண்-பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கிவரும் நிலையில் இந்த வயது வேறுபாடு தேவையற்றது என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|