LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

தீண்டாமையைத் தீண்டாதவர்

சிலர் சாதி ஒழிப்பு பற்றி ஆரவாரமாகப்பேசுவார்கள் . ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்கமாட்டார்கள் . ‘ சாதிகளை ஒழிப்போம் , சாதிகளை ஒழிப்போம் ’ என்ற ஒரு அரசியல் தலைவர் ஆரவாரமாகப்பேசினார் . அப்போது ஒரு தொண்டர் அவர் காதருகே சென்று “ நம்ம சாதியையுமா ? ” என்று கேட்டார் . உடனே தலைவர் சுதாரித்துக் கொண்டு நம்ம சாதியைத்தவிர மற்ற சாதிகளை ஒழிப்போம் என்று பேசத் தொடங்கினார் .

வேளாளர் சங்க கல்யாண மண்டபத்தில் ராமமூர்த்தி முதலியார் அரங்கில் , நாச்சியப்ப கவுண்டர்தலைமையில் , சுப்புநாயக்கர் முன்னிலையில் கருப்பசாமி நாடார் அனுசரணையில் நடக்கிறது சாதி ஒழிப்பு மாநாடு . இந்தப் போலித்தனங்களுக்கு ஆட்படாமல் அமைதிப் புரட்சி செய்தார் பெருந்தலைவர் .

பெருந்தலைவர் அமைத்த மந்திரி சபையில் எம் . பக்தவச்சலம் , சி . சுப்பிரமணியம் , ஏ . ப . ஷெட்டி , எம் . ஏ . மாணிக்க வேலு நாயக்கர் , ராமநாதபுரம் ராஜா , ராமசாமிப் படையாச்சி , பரமேஷ்வரன் ஆகியோர் இடம் பெற்றனர் .

மந்திரிகளுக்கு இலாகாக்களை அளித்ததிலும் பெருந்தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி செய்தார் . அரிசன மந்திரியான பரமேஷ்வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார் . மதுவிலக்கு இலாக்காவும் அவருக்கு அளிக்கப்பட்டது . வேண்டும் என்றே பெருந்தலைவர் செய்தாரா என்றெல்லாம் கூட அப்போது பேசப்பட்டது . ஆனால் அவர் இப்படிச் செய்ததன் குறிக்கோள் இலக்குத் தவறவில்லை . அறநிலையத்துறை மந்திரியாகப் பரமேஷ்வரனை ஆக்கியதன் மூலம் , தமிழ் நாட்டிலுள்ள கோவில் தர்மகர்த்தாக்கள் ஒரு அரிசனுக்கு மதிப்பையும் மரியாதையும் அளிக்கும் நிலையைக் காமராசர் உருவாக்கினார் .

இப்படிச்செய்ததால் அரிசன மக்களுக்கு பெருந்தலைவர் ஒரு விடிவெள்ளியாகக் காட்சியளித்தார் . புதிய சமுதாயத்தில் தங்கள் சமூகம் பெருந்தலைவர் மூலம் பெருமை பெற்றுவிட்டதாக அவர்கள் எண்ணி மனம் மகிழ்ந்தனர் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.