|
||||||||
தேநீர் நேரம் |
||||||||
அன்னை காலை அடுப்படியில் புகுந்தாலே வீட்டில் தேநீர் நேரம் அப்பா கையிலே நாளிதழ் செய்திகளுடன் உறவாடி தேநீர் அருந்தி மகிழ்வார்!
அண்ணன் அக்கா தம்பி கரங்களில் கைபேசி இதழ்களில் புன்னகை இதழ்நுனியில் தேநீர்கோப்பை!
பக்தியுடன் தொலைக்காட்சியில் பாட்டி தாத்தா அம்மா சுப்ரபாதம் கேட்டுகொண்டே சுவைத்து மகிழ்வர் தேநீர்!
உழைப்பாளிகள் களைப்பு மறைய நின்றுகொண்டே தேநீர் அருந்தி சுறுசுறுப்பாக சிரித்து உரையாடுவர்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்
|
||||||||
by Subramanian on 17 Sep 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|