LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை


வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கப்

அரிசி மாவு - 4 கப்

தேங்காய் - 1

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1.முதலில்மிளகு, சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக மிக்ஸில்பொடித்துக் கொள்ளவும்.
2.பின்பு ஒரு பாத்திரத்தில் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.
3.அடுத்ததாக தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும். பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்.
4.ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.
5.முறுக்கு அச்சில்போட்டு மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.
6.பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். (அ) வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.
7.இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.
8.முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்க வேண்டும்.

by   on 23 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.