|
||||||||
தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளரான சிவராமகிருஷ்ணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக 08.06.2023 அன்று மாலை காலமானார் அவருக்கு வயது 93 |
||||||||
திருநெல்வேலி, தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலர்,சங்கராஸ்ரமம் ஐந்தருவி குற்றாலம் தலைவர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் .அகவை 93 .அன்பு வடிவம் அருள் வடிவமாக மாறப் பெற்றவர். 08/06/23 மாலை 5:38மணிக்கு அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார். தனது 13 வது வயதில் இருந்தே தென்காசி திருவள்ளுவர் கழகத்துடன் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டவர்.. 80 ஆண்டுகள் குறள் பணியில், திருவள்ளுவர் கழகத்தின் தொண்டில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்றால் மிகையாகாது. கடந்த 1953 ஆம் ஆண்டில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் துணைச்செயலராகத் தொடங்கி , பின் 1965 இல்செயலராகப் பொறுப்பேற்றார் . முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதன் செயலராக மிகவும் சுறுசுறுப்பாக புத்தாக்கச் சிந்தனையுடன்செயலாற்றி வந்தார். அகவை 93 ...இருந்தாலும் ஒரு இளைஞரை போல் ஓடியாடி சுறுசுறுப்புடன் செயல்படுவார்.. விருந்தோம்பலில் மிகச் சிறந்த ஓங்கிய பண்பாளர். உரிய நேரத்தில் நிகழ்ச்சிகளை தொடங்கி முடிப்பார்.
இவரின் முயற்சியால் 1994 ஆம் வருடம் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூலகம் ஒன்று நிறுவப்பட்டது அகில இந்திய வானொலி நிலையத்தோடு இணைந்து தென்காசி திருவள்ளுவர் கழகம் தனது ஆண்டு விழாவை கொண்டாடும் மரபினை முதன்முதலாக தொடங்கி வைத்தார். இதனால் தென்காசியில் நடக்கும் நிகழ்வுகளின் பயனை உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அறியவழிவகை செய்யப்பட்டது. பல்வேறு திருக்குறள் அமைப்புகளிலும் அறக்கட்டளை நிறுவிஅதன் மூலம் பரிசுகளை அளித்து வந்தார். தமிழக அரசு தமிழ்ச் செம்மல் விருது உட்பட பல்வேறு அமைப்புகள் இவர் தொண்டினைப் பாராட்டி திருக்குறள் தொண்டர் ,குறள் சித்தர், திருக்குறள் பணிச் செம்மல்,திருக்குறள் பேரொளி, குறள் பயிற்றுச் செம்மல் ,சேவைச் செம்மல் ,இலக்கியச் செம்மல் என்ற விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக எமது அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்..
|
||||||||
by Swathi on 09 Jun 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|