LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தேர்வுத் தோல்வியால் தளராத உள்ளம்

 தே ர்வின் தோல்வியால் மனமுடைந்து போயிருந்த கக்கனை வைத்தியநாதய்யர் என்பவர் அழைத்து வரச்செய்து சமாதானம் செய்து ஏதாவது ஒரு வேலை போட்டுத் தருவதாகவும் தகப்பனார் கடனை அடைக்க பணஉதவி அளிப்பதாகவும் ஆறுதல் கூறினார் . ஆனால் . கக்கனுக்குத் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது . மேலும் உதவியாகக் கிடைக்கும் பணத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை . அந்தப் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொள்வதாகவும் கிடைக்கவிருக்கும் ஊதியத்தில் சிறிது சிறிதாகப் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொண்டார் . இவர்தம் தன்மான உணர்வைப் பாராட்டிப் போற்றிய வைத்தியநாதய்யர் , மேலூரில் உள்ள அரிசன மாணவர் விடுதியாகிய சேவாலயத்தில் விடுதிக் காப்பாளராகப் பணியில் அமர்த்தினார் . இதை அடுத்து 1934 ஆம் ஆண்டு மதுரை செனாய் நகரில் அரிசன மாணவர்களுக்காகச் ‘சேவாலயம்’ ஒன்று திறக்கப்பட்டது . முன்னாள் அகில இந்திய காந்தி நினைவு நிதித் தலைவராகிய கே . அருணாச்சலம் அவர்கள் அந்த விடுதியின் காப்பாளராகப் பணியில் நியமிக்கப்பட்டார் . இருவரும் அரிசன மாணவர்களை நன்கு படிக்கத் தூண்டியது மட்டுமின்றி மேலூர் பகுதியிலுள்ள கிராமங்களில் எல்லாம் இரவுப் பள்ளிகளைத் தொடங்கி கிராமத்துக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள் . எனவே இவர்கள் ‘நைட் ஸ்கூல் வாத்தியார்’ என்று கிராம மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்கள் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.