LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

தேசிங்கு சினம்

எண்சீர் விருத்தம்

'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த
    நலமற்ற தமிழர்மட்டும் வாழ மாட்டார்.
    தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை;
    சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு!
    நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும்
    நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள்
    வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி
    மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?' என்றான்.

    'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
    தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய்.
    இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால்
    சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
    உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்!
    உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
    எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்;
    எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.

    யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்!
    இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்!
    நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி
    நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
    தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
    துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்!
    நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
    நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!

    வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத
    வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த
    வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
    வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்:
    நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த
    நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
    கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
    கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.

    ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
    அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்;
    காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
    கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
    காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
    கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
    தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
    தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!

    அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்!
    அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்.
    பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
    பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
    முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன்
    முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
    சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
    செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.

    கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக்
    கண்ணாலே எச்சரிக்கை செய்து மன்னன்
    'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய்
    எல்லார்க்கும் எதிரினிலே பொது நிலத்தில்
    பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து
    பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு
    வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை
    வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில்

    முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர்
    மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு;
    கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்;
    கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு
    வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை;
    மந்திரியே உன்பொறுப்பு நிறைவே றச்செய்!
    இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான்.
    எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்:

    'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன்
    முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ!
    நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன்
    நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்!
    நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து
    நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே!
    ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை!
    அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை!'

    என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்!
    எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை
    ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில்
    ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார்.
    குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே!
    குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி
    நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்!
    நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!

    பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்!
    பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்!
    'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான்.
    இரக்கத்தை 'வா'என்றான். அன்பை நோக்கி
    'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான்.
    'அறமேவா' எனஅழைத்தான்! அங்கே வேறு
    பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்!
    பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.