LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

திம்மன் பூரிப்பு

தென்பாங்கு-கண்ணிகள்

'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
    நாமென்ன நூறுசெல விட்டோம்?
    சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன்
    சூதற்ற நல்லஉளம் கொண்டோன்;
    பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம்
    பங்கில்அவன் நல்லஉள்ளம் வைத்தான்.
    புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி
    போய்அலுவல் நான்புரிய வேண்டும்.

    என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன்
    இன்பமனை யாளும்உரைக் கின்றாள்:
    'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம்
    தெற்குவௌிப் புன்செய்விளை யாதா?
    சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில்
    சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும்.
    என்னஇருந் தாலும்சுபே தாரை - நான்
    என்வரைக்கும் நம்பமுடி யாது.

    நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட
    நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும்
    பங்கமென்று நாமும்அறி வோமே - இதில்
    பற்றுவைக்க ஞாயமில்லை' என்றாள்.
    'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல்
    தட்டிநடக் காதிருக்க வேண்டும்.
    பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப்
    பொட்டலில் கவாத்துசெய்வ தற்கே!

    தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல
    சீனியும் கசக்குமடி பெண்ணே.
    தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன்
    செய்தனையும் குத்தகைக்கு விட்டுப்
    பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல
    பெட்டையையும் சேவலையும் விற்றுச்
    சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல
    செஞ்சிக்குடி ஆவமடி' என்றான்.

    நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து
    நம்மிடத்தில் தங்குவதி னாலே
    காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன்
    கைந்நிறையக் காசுதரு கின்றேன்.
    வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த
    வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும்;
    காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு
    கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு!

    கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல
    கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய்;
    மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல
    மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும்.
    சீருடைய தாகிய தென்பாங்கு - கறி
    செய்துவிடு வாய்இவைகள் போதும்.
    நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல
    நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு.

    பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன்
    பக்குவம் கெடாதுவறுப் பாயே.
    தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந்
    தூணைஒத்த தாய்இரண்டு வாங்கு;
    வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று
    வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான்.
    தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத்
    தக்கபொருள் அத்தனையும் சேர்க்க!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.