தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின்.
இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
காமம் பனைத் துணையும் நிறைய வரின் -மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப வுண்டாகு மாயின் ; தினைத் துணையும் ஊடாமை வேண்டும் -அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற் கொள்ளா திருத்தல் வேண்டும் .
ஊடின் புணர்ச்சி தடைப் பட்டுக் காம நோய் அள விறந்த துன் பந்தரு மென்று , பிறர்க்கு நல்லது சொல்வாள் போன்று தன் விதுப்புக் கூறியவாறு . தினை பனை யென்னும் அளவுப் பெயர்கள் முறையே சிற்றளவும் பேரளவும் உணர்த்தி நின்றன . உம்மையிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு ; பின்னது உயர்வு சிறப்பு.
கலைஞர் உரை:
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும்
கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
Translation
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
Explanation
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.