LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

திரைப்படங்களில்....

இந்திய விடுதலைக்குப்பின் திரையுலகம் செய்த செயல்களால் பல்வேறு அரசியல் தலைவர்களின் பெருமை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டன . மகாத்மா காந்தியடிகள் , வீரசவார்கர் , ஜி . பி . பந்து , பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்கிய வட இந்தியத் திரையுலகும் , விடுதலைக் கவிஞர் பாரதி , கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரனார் , கொடிகாத்த திருப்பூர்க்குமரன் , வீரபாண்டிய கட்டபொம்மன் , மருதுபாண்டியர் போன்றோரின் வரலாறுகளைப் படமாக்கிய தென்னிந்தியத் திரையுலகும் செய்த சேவைகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது . திரையுலகம் என்ற ஒன்று இருக்கும் வரை அந்த வரலாற்றுத் திரைப்படங்கள் அந்தந்தத் தலைவர்களின் நினைவுச் சின்னங்களாகவே நிலைத்திருக்கும் . அதுபோலக் கக்கனின் வாழ்க்கை வரலாற்றில் அவர் கடந்து வந்த புனிதப் பாதையை எடுத்துக்காட்டித் திரைப்பட நினைவுச் சின்னத்தை உருவாக்கிய திரையுலகின் இயக்குநர் திலகங்களான திரு . பி . வாசு , திரு . சேரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் . எவ்விதத் தன்னலம் , திரையுலகிற்கே உரித்தான வணிகச் சிந்தனை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கக்கனை அடையாளம் காட்டியுள்ளதைப் பலரும் போற்றுகின்றனர் . அவ்வாறு அடையாளம் காட்டிய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கன . ‘ வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தின் இயக்குநர் பி . வாசு அவர்கள் அப்படதில் வரும் ஒரு கதைமாந்தரின் உருவம் , உடை ஆகிய அனைத்திலும் கக்கனைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார் என்பது பலராலும் பேசப்படுகிறது .

திரைப்பட இயக்குநர் திரு . சேரன் அவரது ‘தேசிய கீதம்‘ என்ற படத்தின் வசனத்தில் கூடக் கக்கனின் பெயரை உச்சரிக்க வைத்து நேரடியாகவே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் . அப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரை ‘முன்னாள் அமைச்சர் கக்கனை எண்ணியே படைத்தேன்’ என்று மதுரை மேலூர் மண்ணுக்குச் சொந்தக்காரரான சேரன் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார் . திரையுலகால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் வரிசையில் கக்கனும் இடம் பெற்றிருக்கிறார் , என்பதை விடப் பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கின் நாயகனாக அடையாளம் காட்டப்பட்டிருப்பது திரையுலகம் கக்கனுக்குச் செய்த பெருமை என்று கொள்ள வேண்டும் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.