LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

மூன்றாம் திருமுறை முதல் பகுதி


3.001. கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1     ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.     01
2.     கொட்டமேகம ழுங்குழ லாளொடு
கூடினாயெரு தேறினாய் நுதல்
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ.     02
3.    நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார்
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழக்
கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே.     03
4.     கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்
கோலவாண்மதி போல முகத்திரண்
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர்
காதலாற்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.     04
5.    தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே.     05
6.    ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னினாய்மழு வாளினாய் அழல்
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே.     06
7.    சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையாற்றொழ வல்லடி யார்களை
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே.     07
8.     வேயினார்பணைத் தோளியொ டாடலை
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே.     08
9.    தாரினார்விரி கொன்றை யாய்மதி
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட்
சீரினால்வழி பாடொழி யாததோர்
செம்மையாலழ காயசிற் றம்பலம்
ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே.     09
10.     வெற்றரையுழல் வார்துவ ராடைய
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
காதலாற்கழற் சேவடி கைதொழ
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே.     10
11.    நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நாண்மறைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.     11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 002 திருப்பூந்தராய்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    12    பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
    வாயினாள்பனி மாமதி போல்முகத்
    தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
    வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
    யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
    புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.     01
    13.    காவியங்கருங் கண்ணி னாள்கனித்
    தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத்
    தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
    தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
    ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
    பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.     02
    14.    பையராவரும் அல்குல் மெல்லியல்
    பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
    தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
    செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
    தேறலூறலின் சேறுல ராதநற்
    பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே.     03
    15.     முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
    அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந்
    துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
    வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
    மேவினார்பதி வீமரு தண்பொழிற்
    புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே.     04
    16.     பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
    கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
    பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
    கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
    நீலமல்கிய காமரு வாவிநற்
    புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே.     05
    17.     வாணிலாமதி போல்நுத லாள்மட
    மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
    பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ்
    சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
    சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
    போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.     06
    18.     காருலாவிய வார்குழ லாள்கயற்
    கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
    வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
    நீருலாவிய சென்னி யன்மன்னி
    நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி
    போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.     07
    19.    காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
    கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத்
    தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத்
    தீசன்மேவும் இருங்கயி லையெடுத்
    தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி
    பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.     08
    20.    கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை
    கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை
    பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
    மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
    மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
    பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே.     09
    21.     கலவமாமயி லார்இய லாள்கரும்
    பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
    குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
    அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
    ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
    புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.     10
    22.    தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
    கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர்
    பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
    றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
    ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
    டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 003 திருப்புகலி
    நாலடிமேல் வைப்பு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    23    இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
    புயலன மிடறுடைப் புண்ணியனே
    கயலன அரிநெடுங் கண்ணியொடும்
    அயலுல கடிதொழ அமர்ந்தவனே
    கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
    நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.     01
    24.    நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
    இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
    மலையினில் அரிவையை வெருவவன்தோல்
    அலைவரு மதகரி யுரித்தவனே
    இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
    உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.     02
    25.     பாடினை அருமறை வரல்முறையால்
    ஆடினை காணமுன் அருவனத்திற்
    சாடினை காலனைத் தயங்கொளிசேர்
    நீடுவெண் பிறைமுடி நின்மலனே
    நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
    தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.     03
    26.     நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
    அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
    கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
    முழவொடும் அருநட முயற்றினனே
    முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
    அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.     04
    27.     கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
    உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
    பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
    அருமையில் அளப்பரி தாயவனே
    அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
    பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.    05
    28.     அடையரி மாவொடு வேங்கையின்தோல்
    புடைபட அரைமிசைப் புனைந்தவனே
    படையுடை நெடுமதிற் பரிசழித்த
    விடையுடைக் கொடிமல்கு வேதியனே
    விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித்
    தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.     06
    29.    அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
    செடியவல் வினைபல தீர்ப்பவனே
    துடியிடை அகலல்குல் தூமொழியைப்
    பொடியணி மார்புறப் புல்கினனே
    புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
    நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.     07
    30.    இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
    பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
    குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
    அரவிரி சடைமுடி ஆண்டகையே
    அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
    இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.     08
    31.     உருகிட வுவகைதந் துடலினுள்ளால்
    பருகிடும் அமுதன பண்பினனே
    பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
    பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்
    உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
    வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.     09
    32.    கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
    செய்வன தவமலாச் செதுமதியார்
    பொய்யவ ருரைகளைப் பொருளெனாத
    மெய்யவ ரடிதொழ விரும்பினனே
    வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
    உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.    10
    33.    புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
    விண்ணவ ரடிதொழ விளங்கினானை
    நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
    பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
    நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
    இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 004 திருவாவடுதுறை
    நாலடிமேல் வைப்பு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    34     இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.     01
    35.     வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.     02
    36.     நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனலெரி யனல்புல்கு கையவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     03
    37.     தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரியெழ முனிந்தவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     04
    38.     கையது வீழினுங் கழிவுறினுஞ்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     05
    39.     வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     06
    40.     வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை யொருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     07
    41.     பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
    சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி இராவணனை
    ஆரிடர் படவரை யடர்த்தவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     08
    42.     உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.     09
    43.     பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
    புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.     10
    44.     அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்மிறையை
    நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 005 திருப்பூந்தராய்
    ஈரடிமேல் வைப்பு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    45    தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
    மிக்க செம்மை விமலன் வியன்கழல்
    சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
    நன்ற தாகிய நம்பன்தானே.     01
    46.     புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
    வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
    ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
    மூல மாய முதல்வன்தானே.     02
    47.     வேந்த ராயுல காள விருப்புறிற்
    பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
    நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
    சாதி யாவினை யானதானே.     03
    48.     பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
    ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
    சிந்தை நோயவை தீர நல்கிடும்
    இந்து வார்சடை யெம்மிறையே.     04
    49.     பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
    மலிந்த புந்திய ராகி வணங்கிட
    நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
    எந்தை யாயஎம் ஈசன்தானே.     05
    50.     பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
    நாதன் சேவடி நாளும் நவின்றிட
    நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
    பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.     06
    51.     புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
    பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
    பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
    சேவ தேறிய செல்வன்தானே.     07
    52.     போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
    காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
    அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
    பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.     08
    53.     மத்த மான இருவர் மருவொணா
    அத்த னானவன் மேவிய பூந்தராய்
    ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
    மாளு மாறருள் செய்யுந்தானே.     09
    54.     பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
    திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
    பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
    ஏந்து மான்மறி யெம்மிறையே.     10
    55.     புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
    அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
    பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
    பந்த மார்வினை பாறிடுமே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 006 திருக்கொள்ளம்பூதூர்
    ஈரடிமேல் வைப்பு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    56    கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
    நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     01
    57.    கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்
    நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     02
    58.    குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
    விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     03
    59.     குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்
    தவள நீறணி தலைவனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     04
    60.    கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்
    நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     05
    61.    ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்
    ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     06
    62.     ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
    ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     07
    63.    குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்
    அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     08
    64.     பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்
    இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     09
    65.     நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்
    தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
    செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
    நல்கு மாறருள் நம்பனே.     10
    66.     கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்
    நன்று காழியுள் ஞானசம் பந்தன்
    இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
    என்றும் வானவ ரோடிருப்பாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வில்வவனேசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
    இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
    கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3.007 திருப்புகலி
    பண் - காந்தாரபஞ்சமம்<
    திருச்சிற்றம்பலம்

    67     கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
    பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
    புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
    பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.     01
    68.    சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
    பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
    பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்
    காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே.     02
    69.     கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
    மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
    பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
    விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.     03
    70.    அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
    கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
    பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
    மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.     04
    71.    சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
    நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
    பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
    கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.     05
    72.    இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச்
    செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
    பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
    அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.     06
    73.    சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
    வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
    போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்
    பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.     07
    74.     கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
    வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
    பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
    அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.     08
    75.    பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
    தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
    புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
    மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.     09
    76.    பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
    தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
    புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
    வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.     10
    77.    பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
    பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
    ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
    ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 008 திருக்கடவூர்வீரட்டம்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    78    சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
    உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
    கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
    விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.     01
    79.     எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
    புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே
    கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
    விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.     02
    80.    நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
    பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்
    காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
    வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.     03
    81.    மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
    முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக்
    கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்
    விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.     04
    82.     சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
    படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங்
    கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்
    விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.     05
    83.     பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
    உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
    கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
    வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.     06
    84.    செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
    முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
    கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
    வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.     07
    85.     அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச
    முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதல் மூர்த்தியுங்
    கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
    வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.     08
    86.    வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
    புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே
    கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
    விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.     09
    87.    தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்
    ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
    காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
    வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.     10
    88.    வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
    அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்
    சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம்
    பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 009 திருவீழிமிழலை
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    89     கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
    வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
    வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
    ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.     01
    90.     கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
    மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
    நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
    பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.     02
    91.    நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
    வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்
    அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
    மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.     03
    92.    கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
    விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
    தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
    அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.     04
    93.     பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
    வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
    முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
    இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.     05
    94.    வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
    விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
    இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்
    திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.     06
    95.     சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிரு தொன்னூலர்
    வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
    காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
    நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.     07
    96.    எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர
    விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
    படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
    கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.    08
    97.    திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
    மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
    சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
    நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.     09
    98.    துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
    வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
    சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
    மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.     10
    99.    வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
    ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்
    தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
    மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 010 திருஇராமேச்சுரம்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    100     அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை
    முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
    இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
    தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.     01
    101.    தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
    பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
    ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
    மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.     02
    102.    மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்
    கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்
    ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
    ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.     03
    103.    உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
    வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
    விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்
    தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.     04
    104.    ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
    வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
    ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
    பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.     05
    105.    அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
    பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
    இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்
    துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.     06
    106.     சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
    முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
    இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
    பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.     07
    107.    பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட
    அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
    இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்
    தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.     08
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     09
    108.     சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
    வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால்
    ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
    ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.     10
    109.    பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனை
    இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
    புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
    அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 011 திருப்புனவாயில்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    110     மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
    பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
    அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
    புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.     01
    111.    விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய்
    வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங்
    கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
    புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.     02
    112.    விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
    புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
    தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
    படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.     03
    113.    சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
    அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
    பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
    பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.     04
    114.    கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
    புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
    ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
    மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.     05
    115.     வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
    காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
    போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
    சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.     06
    116.    பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
    திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
    பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
    இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.     07
    117.    மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட
    வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய
    இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
    புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.     08
    118.     திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
    கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
    நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய
    பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.     09
    119.     போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
    சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
    போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
    வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.     10
    120.    பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
    கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
    நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
    அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.     11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்,தேவியார் - கருணையீசுவரியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 012 திருக்கோட்டாறு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    121     வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
    ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
    கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
    ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.     01
    122.     ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
    பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
    கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
    ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.     02
    123.    இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
    மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
    குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
    அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.     03
    124.    ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
    வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந்
    தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
    தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.     04
    125.    வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
    செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
    கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
    நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.     05
    126.     பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
    வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங்
    கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
    அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.     06
    127.    துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
    வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந்
    தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
    அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.     07
    128.    இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
    கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
    குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
    அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.     08
    129.     ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
    நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
    கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
    ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.     09
    130.    கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
    தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
    கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
    இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.     10
    131.    கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
    அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
    கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
    படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்,
    தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 013 திருப்பூந்தராய்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    132     மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்
    துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்
    புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
    அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.     01
    133.     மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
    வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
    போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்
    தாதணி குழலுமை தலைவர் காண்மினே.     02
    134.     தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
    பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
    பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
    கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.     03
    135.    நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
    மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
    பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
    பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.     04
    136.    வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
    ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
    புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
    கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.     05
    137.    துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
    அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
    பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
    அங்கய லனகணி அரிவை பங்கரே.     06
    138.    அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக்
    கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
    புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
    வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.     07
    139.    மாசின அரக்கனை வரையின் வாட்டிய
    காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
    பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
    காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.     08
    140.     தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
    வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
    பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்
    கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே     09
    141.    முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
    அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
    புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
    கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.     10
    142.     புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
    பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
    பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
    சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 014 திருப்பைஞ்ஞீலி
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    143     ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
    ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
    நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
    பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.     01
    144.    மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
    பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
    உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத்
    திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.     02
    145.    அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்
    பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
    வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
    குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.     03
    146.    கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
    பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
    பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
    ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே.     04
    147.    விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
    சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
    பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
    கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.     05
    148.    விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
    படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
    துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
    சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.     06
    149.    தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
    பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
    மேயவன் வேய்புரை தோளி பாகமா
    ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.     07
    150.     தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
    பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
    முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப்
    பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.     08
    151.    நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச்
    சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
    பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
    தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.     09
    152.    பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
    சாலியா தவர்களைச் சாதி யாததோர்
    கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
    ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.     10
    153.    கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
    நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
    பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
    உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - விசாலாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 015 திருவெண்காடு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    154     மந்திர மறையவை வான வரொடும்
    இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
    வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
    அந்தமு முதலுடை அடிக ளல்லரே.     01
    155.    படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
    உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
    விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
    சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.     02
    156.    பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
    தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
    மேலவர் பரவுவெண் காடு மேவிய
    ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே.     03
    157.    ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந்
    தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
    வேழம துரித்தவெண் காடு மேவிய
    யாழின திசையுடை இறைவ ரல்லரே.     04
    158.    பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
    ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை
    வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
    பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.     05
    159.    மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
    எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
    விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
    அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே.     06
    160.    நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன்
    கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
    வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
    பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.     07
    161.    மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
    தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
    விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
    அலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே.     08
    162.    ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
    தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
    வேடம துடையவெண் காடு மேவிய
    ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே.     09
    163.    போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்
    நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
    வேதியர் பரவுவெண் காடு மேவிய
    ஆதியை யடிதொழ அல்ல லில்லையே.     10
    164.    நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
    செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
    சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
    அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 016 திருக்கொள்ளிக்காடு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    165     நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
    றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
    உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
    குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.     01
    166.    ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
    சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
    மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
    கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.    02
    167.    அத்தகு வானவர்க் காக மால்விடம்
    வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
    மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
    கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.     03
    168.    பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
    நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
    ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
    கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.     04
    169.    வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
    சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
    நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
    கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.     05
    170.    பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
    மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
    வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
    குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.     06
    171.    இறையுறு வரிவளை இசைகள் பாடிட
    அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
    சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
    குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.     07
    172.     எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
    அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
    படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
    கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.    08
    173.    தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
    நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
    பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
    கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.     09
    174.    நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
    ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
    பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
    கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.     10
    175.    நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
    குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
    சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
    கற்றவர் கழலடி காண வல்லரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 017 திருவிசயமங்கை
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    176     மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
    அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
    குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
    விரவிய பொழிலணி விசய மங்கையே.     01
    177.    கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
    பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
    கோதனம் வழிபடக் குலவு நான்மறை
    வேதியர் தொழுதெழு விசய மங்கையே.     02
    178.    அக்கர வரையினர் அரிவை பாகமாத்
    தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
    தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
    மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.     03
    179.    தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு
    புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
    படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
    விடைமலி கொடியணல் விசய மங்கையே.     04
    180.    தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
    ஏடமர் கோதையோ டினித மர்விடங்
    காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
    வேடம துடையணல் விசய மங்கையே.     05
    181.    மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
    ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
    அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
    மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.     06
    182.    இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
    வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
    சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்
    விரும்பிய சடையணல் விசய மங்கையே.     07
    183.    உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
    களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
    தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
    விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.     08
    184.     மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
    அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
    தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
    விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.     09
    185.    கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
    நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
    செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
    விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.     10
    186.    விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
    நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
    பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
    புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.    11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - விசயநாதேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 018 திருவைகன்மாடக்கோயில்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    187     துளமதி யுடைமறி தோன்று கையினர்
    இளமதி யணிசடை எந்தை யாரிடம்
    உளமதி யுடையவர் வைக லோங்கிய
    வளமதி தடவிய மாடக் கோயிலே.     01
    188.    மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
    மையகண் மலைமக ளோடும் வைகிடம்
    வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
    செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.     02
    189.     கணியணி மலர்கொடு காலை மாலையும்
    பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
    தணியணி உமையொடு தாமுந் தங்கிடம்
    மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.     03
    190.    கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
    தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
    வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
    செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.     04
    191.    விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
    மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
    மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
    குடதிசை நிலவிய மாடக் கோயிலே.     05
    192.    நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
    இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
    மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
    திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.     06
    193.     எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
    திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
    வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
    வருமுகி லணவிய மாடக் கோயிலே.     07
    194.    மலையன இருபது தோளி னான்வலி
    தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
    மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
    வலம்வரு மலையன மாடக் கோயிலே.     08
    195.    மாலவன் மலரவன் நேடி மால்கொள
    மாலெரி யாகிய வரதர் வைகிடம்
    மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
    மாலன மணியணி மாடக் கோயிலே.     09
    196.    கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
    பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
    மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
    வடமலை யனையநன் மாடக் கோயிலே.     101
    197.    மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
    சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
    பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
    சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வைகனாதேசுவரர், தேவியார் - வைகலம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 019 திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    198     எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
    நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
    அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
    குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.     01
    199.    மையகண் மலைமகள் பாக மாயிருள்
    கையதோர் கனலெரி கனல ஆடுவர்
    ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
    செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.     02
    200.    மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
    பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
    அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
    இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.     03
    201.    இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
    பரவமல் கருமறை பாடி யாடுவர்
    அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
    மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே.     04
    202.    சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
    வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
    அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
    செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே.     05
    203.     கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
    சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
    அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
    நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.     06
    204.    இகலுறு சுடரெரி இலங்க வீசியே
    பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
    அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
    புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே.     07
    205.    எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன
    கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
    அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
    புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.     08
    206.    வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
    பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
    அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
    செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.     09
    207.    வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
    மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
    அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
    உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.    10
    208.     அழகரை யடிகளை அம்பர் மேவிய
    நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
    உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
    தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரிநாதேசுவரர், தேவியார் - பூங்குழனாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 020 திருப்பூவணம்
    ஈரடிமேல் வைப்பு
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    209     மாதமர் மேனிய னாகி வண்டொடு
    போதமர் பொழிலணி பூவ ணத்துறை
    வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த
    நாதனை யடிதொழ நன்மை யாகுமே.     01
    210.    வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
    தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை
    ஆனநல் லருமறை யங்கம் ஓதிய
    ஞானனை யடிதொழ நன்மை யாகுமே.     02
    211.    வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்
    புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
    அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
    நந்தியை யடிதொழ நன்மை யாகுமே.     03
    212.    வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
    பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
    ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
    நாசனை யடிதொழ நன்மை யாகுமே.     04
    213.    குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
    பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
    அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
    பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.     05
    214.     வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
    பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
    கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
    நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே.    06
    215.     பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
    பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
    மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்
    அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.     07
    216.    வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
    விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
    பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
    பரவிய அடியவர்க் கில்லை பாவமே.     08
    217.    நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
    சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
    போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
    ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.     09
    218.    மண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங்
    குண்டருங் குணமல பேசுங் கோலத்தர்
    வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்
    கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே.     10
    219.    புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
    அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
    நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
    பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 021 திருக்கருக்குடி
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    220    நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி
    நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்
    கனைகடல் வையகந் தொழு கருக்குடி
    அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.     01
    221.     வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
    மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
    காதியல் குழையினன் கருக்கு டியமர்
    ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.     02
    222.    மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி
    நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
    அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே
    வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.     03
    223.     ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்
    கானிடை யாடலான் பயில் கருக்குடிக்
    கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
    வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.     04
    224.     சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
    கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி
    பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்
    ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.     05
    225.     இன்புடை யாரிசை வீணை பூணரா
    என்புடை யாரெழில் மேனி மேலெரி
    முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்
    கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.     06
    226.    காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்
    கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
    சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்
    சாலவும் இனிதவ ருடைய தன்மையே.     07
    227.    எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
    முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
    கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
    அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.     08
    228.    பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்
    வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
    ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி
    நாமன னினில்வர நினைதல் நன்மையே.     09
    229.    சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
    ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்
    காக்கிய அரனுறை யணிக ருக்குடிப்
    பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.     10
    230.    கானலில் விரைமலர் விம்மு காழியான்
    வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
    ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
    ஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சற்குணலிங்கேசுவரர், தேவியார் - சர்வாலங்கிரதமின்னம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    231     துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
    நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
    வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
    றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.     01
    232.    மந்திர நான்மறை யாகி வானவர்
    சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
    செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
    கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.     02
    233.    ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
    ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்
    தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
    ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.     03
    234.     நல்லவர் தீயரெ னாது நச்சினர்
    செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
    கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்
    தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.     04
    235.    கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்
    தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
    தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
    அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.    05
    236.     தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
    இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
    அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.     06
    237.    வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
    பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
    மாடு கொடுப்பன மன்னு மாநடம்
    ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.     07
    238.    வண்டம ரோதி மடந்தை பேணின
    பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
    தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
    கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.     08
    239.     கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
    சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
    பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
    கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.     09
    240.    புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
    சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
    வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
    கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.     10
    241.    நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
    கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
    அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
    துற்றன வல்லவர் உம்ப ராவரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 023 திருவிற்கோலம்
    பண் - காந்தாரபஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    242     உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
    திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
    வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
    செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.     01
    243.    சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
    உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
    வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
    செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.     02
    244.     ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
    மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
    பையர வல்குலாள் பாக மாகவுஞ்
    செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.     03
    245.     விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
    உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
    புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
    சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.    04
    246.    முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
    கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
    அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
    சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.     05
    247.     தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
    வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
    மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
    செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.     06
    248.    விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்
    தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
    எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்
    சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.     07
        இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     08
    249.    திரிதரு புரமெரி செய்த சேவகன்
    வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
    அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
    தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.     09
    250.    சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
    நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
    பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
    சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.     10
    251.     கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
    சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
    நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
    பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புராந்தகேசுவரர், தேவியார் - புராந்தரியம்மை.
    இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 024 திருக்கழுமலம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    252     மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
    கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.     01
    253.    போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
    தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
    காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
    பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.     02
    254.     தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
    வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
    கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
    பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.     03
    255.    அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
    நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
    கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
    பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.     04
    256.    அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
    விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
    கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
    பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.     05
    257.    மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
    கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
    சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
    பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.     06
    258.    குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
    நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
    கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
    பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.     07
    259.    அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
    நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
    கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
    பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.     08
    260.    நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
    அடியொடு முடியறி யாவழல் உருவினன்
    கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
    பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.     09
    261.    தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
    ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
    காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
    பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.     10
    262.    கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
    பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
    அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
    விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.    11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 025 திருந்துதேவன்குடி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    263     மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
    புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
    திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
    அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.     01
    264.    வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
    ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
    தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
    ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.     02
    265.    மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
    வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
    தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
    ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.     03
    266.    செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
    கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
    புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
    அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.     04
    267.     விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
    மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
    தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
    அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.     05
    268.    பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
    புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
    திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
    அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.     06
    269.     கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
    குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
    திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
    அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.    07
    270.    உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
    விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
    திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
    அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.     08
    271.     துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
    விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
    திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
    அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.     09
    272.    செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
    உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
    திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
    அருமருந் தாவன அடிகள்வே டங்களே.     10
    273.     சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
    மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
    நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
    பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர், தேவியார் - அருமருந்துநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 026 திருக்கானப்பேர்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    274     பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
    விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
    கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
    அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.     01
    275.     நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்
    பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
    கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
    விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.    02
    276.    வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங்
    காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
    நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
    தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.     03
    277.    நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
    பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்
    கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
    குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.     04
    278.    ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
    ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய
    கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்
    வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.     05
    279.    பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
    வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
    கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
    உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.     06
    280.     மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
    கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
    ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்
    ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.     07
    281.    வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
    டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய
    தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
    நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.     08
    282.    சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன்
    நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான்
    கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
    தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.     09
    283.    உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
    பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
    மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி
    கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.     10
    284.    காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்
    கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான்
    நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
    பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.     11
    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காளையீசுவரர், தேவியார் - மகமாயியம்மை.
    இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 027 திருச்சக்கரப்பள்ளி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    285     படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
    உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
    விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
    சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.     01
    286.    பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
    சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
    நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
    சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.     02
    287.    மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
    பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
    துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
    தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.     03
    288.    நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
    வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
    மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
    சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.     04
    289.    வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
    அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
    கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
    சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.     05
    290.    பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
    வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
    ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
    தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.     06
    291.     பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
    பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
    நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
    தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.     07
    292.    முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
    எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
    அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
    சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.     08
    293.    துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
    பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
    மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
    தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.     09
    294.    உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
    விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
    வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
    தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.     10
    295.    தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங்
    கண்ணுத லவனடி கழுமல வளநகர்
    நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
    பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

    சக்கரப்பள்ளியினிற் சார்ந்த அல்லியங்கோதை,
    சொற்கிரங்கு மாலந்துறையானே என்னுஞ்
    சிவநாமப் பஃறொடையானு முணர்க.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 028 திருமழபாடி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    296     காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்
    சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
    வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
    மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.     01
        297. கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
    பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
    துறையணி குருகினந் தூமலர் துதையவே
    மறையணி நாவினான் மாமழ பாடியே.     02
    298.    அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ்
    செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப்
    பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
    மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.     03
    299.     அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன்
    முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
    பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும்
    அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.     04
    300.    கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
    வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்
    செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
    மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.     05
    301.    பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்
    காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான்
    சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
    மாலினார் வழிபடு மாமழ பாடியே.     06
    302.    விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
    எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
    கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
    அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.     07
    303.    கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன
    சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா
    இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
    வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.     08
    304.     ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
    நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
    பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
    மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.     09
    305.    உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
    நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
    பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
    மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.     10
    306.    ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
    சீலத்தான் மேவிய திருமழ பாடியை
    ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
    கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 029 மேலைத்திருக்காட்டுப்பள்ளி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    307     வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
    ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
    காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
    நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.     01
    308.     நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
    கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
    அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
    பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.     02
    309.     பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
    கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
    விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
    அண்ணலார் எம்மையா ளுடையஎம் அடிகளே.     03
    310.     பணங்கொள்நா கம்மரைக் கார்ப்பது பல்பலி
    உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
    கணங்கள்கூ டித்தொழு தேத்துகா ட்டுப்பள்ளி
    நிணங்கொள்சூ லப்படை நிமலர்தந் நீர்மையே.     04
    311.     வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக்
    கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
    திரையுலாங் கங்கையுந் திங்களுஞ் சூடியங்
    கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.     05
    312.     வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
    ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
    காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
    நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.     06
    313.     மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
    கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
    தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
    ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே.     07
    314.     சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
    மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
    கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
    தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.     08
    315.     செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
    தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்
    கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
    அங்கையால் தொழுமவர்க் கல்லலொன் றில்லையே.    09
    316.     போதியார் பிண்டியா ரென்றஅப் பொய்யர்கள்
    வாதினால் உரையவை மெய்யல வைகலுங்
    காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
    ஏரினால் தொழுதெழ இன்பம்வந் தெய்துமே.     101
    317.     பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
    அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
    கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
    பரவிய தமிழ்சொல்லப் பறையும்மெய்ப் பாவமே.     11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தீயாடியப்பர், தேவியார் - வார்கொண்டமுலையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 030 திருஅரதைப்பெரும்பாழி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    318     பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
    மொய்த்தபேய் கண்முழக் கம்முது காட்டிடை
    நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
    பித்தர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     01
    319.     கயலசே லகருங் கண்ணியர் நாடொறும்
    பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
    இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
    பெயரர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     02
    320.     கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
    மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
    ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
    பீடர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     03
    321.     மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
    விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
    பண்ணர்பா டலுடை யாரொரு பாகமும்
    பெண்ணர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     04
    322.     மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
    கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
    நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
    பிறையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     05
    323.     புற்றர வம்புலித் தோலரைக் கோவணந்
    தற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு
    சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
    பெற்றர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     06
    324.     துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
    இணையிலேற் றையுகந் தேறுவ ரும்மெரி
    கணையினால் முப்புரஞ் செற்றவர் கையினில்
    பிணையர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     07
    325.     சரிவிலா வல்லரக் கன்தடந் தோள்தலை
    நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
    அரிவைபா கம்மமர்ந் தாரடி யாரொடும்
    பிரிவில்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     08
    326.     வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
    எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
    கரியமா லோடயன் காண்பரி தாகிய
    பெரியர்கோ யில்லர தைப்பெரும் பாழியே.     09
    327.     நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
    ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
    சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
    பேணுகோ யில்லர தைப்பெரும் பாழியே.     10
    328.     நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
    பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
    சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
    ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.     11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பரதேசுவரர், தேவியார் - அலங்காரநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 031 திருமயேந்திரப்பள்ளி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    329     திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
    கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
    வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
    அரவரை அழகனை அடியிணை பணிமினே.     01
    330.     கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
    கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
    வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
    செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.     02
    331.     கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
    தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு
    மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
    ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.     03
    332.     வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
    சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
    மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
    எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.     04
    333.     நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
    சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
    மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
    கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.     05
    334.     சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
    இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
    மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
    அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.     06
    335.     சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
    நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
    படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
    அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.     07
    336.     சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
    கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
    மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
    அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.     08
    337.     நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
    ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
    மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
    யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.    09
    338.     உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
    படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
    மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
    இடமுடை ஈசனை இணையடி பணிமினே.     10
    339.     வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
    நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
    நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
    உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமேனியழகர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 032 திருஏடகம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    340     வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
    பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
    மன்னிய மறையவர் வழிபட அடியவர்
    இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.     01
    341.     கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
    வடிவுற அமைதர மருவிய ஏடகத்
    தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்
    இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.     02
    342.     குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
    வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
    செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங்
    கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.     03
    343.     ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங்
    கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்
    சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்
    சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.     04
    344.     வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
    கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
    பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
    எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.     05
    345.     பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
    வைகையின் வடகரை மருவிய ஏடகத்
    தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும்
    வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    346.     தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
    படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
    மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
    இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.     08
    347.     பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
    தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
    அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும்
    இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.     09
    348.     குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
    பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
    வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
    இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.     10
    349.     கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
    ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
    நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
    பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 033 திருஉசாத்தானம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    350     நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
    பேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக்
    காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
    சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.     01
        351. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
    பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
    முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
    தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.     02
    352.     தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
    ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்
    காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்
    சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.     03
    353.     மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்
    குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ
    நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
    செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.     04
        இப்பதிகத்தில் 5-ம், 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின.     05-06
    354.     பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்
    தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்
    கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்
    தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.     07
    355.     மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
    சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
    அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்
    திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.     08
    356.     ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்
    காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
    பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ்
    சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.     09
    357.     கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
    ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்
    வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
    தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே.     10
    358.     வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்
    திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை
    உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்
    நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மந்திரபுரீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 034 திருமுதுகுன்றம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    359     வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
    அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
    விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
    திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.     01
    360.    வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
    பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
    மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்
    செறியுளார் புறவணி திருமுது குன்றமே.     02
    361.    ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை
    கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
    நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்
    தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.     03
    362.    உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்
    விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
    உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்
    திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.     04
    363.    கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர்
    இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
    வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்
    செடியதார் புறவணி திருமுது குன்றமே.     05
    364.    கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
    வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்
    ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்
    தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.     06
    365.    மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
    வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
    அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
    செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.    07
    366.     காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை
    ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
    வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்
    சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.     08
    367.    ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
    பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
    ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந்
    தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.     09
    368.    மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
    பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
    வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
    தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.     10
    369.    திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
    நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்
    பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.    11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 035 திருத்தென்குடித்திட்டை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    370     முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
    தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
    மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
    செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.     01
    371.     மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
    நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
    பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
    சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.    02
    372.     கருவினா லன்றியே கருவெலா மாயவன்
    உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
    பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
    திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.     03
    373.     உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
    விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
    எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
    தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.     04
    374.     வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
    அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
    செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்
    திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.     05
    375.     ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
    கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
    ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
    தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.     06
    376.     கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
    வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்
    தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
    தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.     07
    377.     மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்
    தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்
    காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
    சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.    08
    378.     நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
    காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
    ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
    சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.     09
    379.     குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
    பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
    வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
    தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.     10
    380.     தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
    கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
    ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
    பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 036 திருக்காளத்தி
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    381     சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
    உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
    மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
    எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.     01
    382.     ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
    சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
    காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
    நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.     02
    383.     கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
    மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
    ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
    வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.     03
    384.     கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
    அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
    ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
    விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.     04
    385.     வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
    திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
    விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
    நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.     05
        இப்பதிகத்தில் 6-ம், 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின.     06-07
    386.     முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
    எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
    கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
    அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.     08
    387.     மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
    நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
    வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
    அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.     09
    388.     வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
    பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
    ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
    வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.     10
    389.     அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
    வட்டவார் சடையனை வயலணி காழியான்
    சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
    இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 037 திருப்பிரமபுரம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    390     கரமுனம்மல ராற்புனல்மலர்
        தூவியேகலந் தேத்துமின்
        பரமனூர்பல பேரினாற்பொலி
        பத்தர்சித்தர்கள் தாம்பயில்
        வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
        ஐயன்நாடொறும் மேயசீர்ப்
        பிரமனூர்பிர மாபுரத்துறை
        பிஞ்ஞகனருள் பேணியே.     01
    391.     விண்ணிலார்மதி சூடினான்விரும்
        பும்மறையவன் தன்றலை
        உண்ணநன்பலி பேணினான்உல
        கத்துளூனுயி ரான்மலைப்
        பெண்ணினார்திரு மேனியான்பிர
        மாபுரத்துறை கோயிலுள்
        அண்ணலாரரு ளாளனாயமர்
        கின்றஎம்முடை யாதியே.     02
    392.     எல்லையில்புக ழாளனும்இமை
        யோர்கணத்துடன் கூடியும்
        பல்லையார்தலை யிற்பலியது
        கொண்டுகந்த படிறனுந்
        தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
        தூமலர்சொரிந் தேத்தவே
        மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
        மாபுரத்துறை மைந்தனே.     03
    393.     அடையலார்புரஞ் சீறியந்தணர்
        ஏத்தமாமட மாதொடும்
        பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
        மாபுரத்துறை கோயிலான்
        தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
        லேபரவிநின் றேத்தினால்
        இடையிலார்சிவ லோகமெய்துதற்
        கீதுகாரணங் காண்மினே.     04
    394.     வாயிடைம்மறை யோதிமங்கையர்
        வந்திடப்பலி கொண்டுபோய்ப்
        போயிடம்எரி கானிடைப்புரி
        நாடகம்இனி தாடினான்
        பேயொடுங்குடி வாழ்வினான்பிர
        மாபுரத்துறை பிஞ்ஞகன்
        தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
        றோதுவார்க்கருள் தன்மையே.     05
    395.     ஊடினாலினி யாவதென்னுயர்
        நெஞ்சமேயுறு வல்வினைக்
        கோடிநீயுழல் கின்றதென்னழ
        லன்றுதன்கையி லேந்தினான்
        பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
        மாபுரத்துறை வேதியன்
        ஏடுநேர்மதி யோடராவணி
        எந்தையென்றுநின் றேத்திடே.     06
    396.     செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
        ரென்றும்ஏத்தி நினைந்திட
        ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
        மாமறைப்பொரு ளாயினான்
        பெய்யும்மாமழை யானவன்பிர
        மாபுரம்இடம் பேணிய
        வெய்யவெண்மழு வேந்தியைநினைந்
        தேத்துமின்வினை வீடவே.     07
    397.     கன்றொருக்கையில் ஏந்திநல்விள
        வின்கனிபட நூறியுஞ்
        சென்றொருக்கிய மாமறைப்பொருள்
        தேர்ந்தசெம்மல ரோனுமாய்
        அன்றரக்கனைச் செற்றவன்அடி
        யும்முடியவை காண்கிலார்
        பின்றருக்கிய தண்பொழிற்பிர
        மாபுரத்தரன் பெற்றியே.     08
    398.     உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
        கஞ்சிமண்டைகொள் தேரரும்
        பண்டடக்குசொற் பேசுமப்பரி
        வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
        தண்டொடக்குவன் சூலமுந்தழல்
        மாமழுப்படை தன்கையிற்
        கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
        மாபுரத்துறை கூத்தனே.     09
    399.     பித்தனைப்பிர மாபுரத்துறை
        பிஞ்ஞகன்கழல் பேணியே
        மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
        செய்துநன்பொருள் மேவிட
        வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
        வாய்நவின்றெழு மாலைகள்
        பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
        போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.     10
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 038 திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    400     வினவினேன்அறி யாமையில்லுரை
        செய்ம்மினீரருள் வேண்டுவீர்
        கனைவிலார்புனற் காவிரிக்கரை
        மேயகண்டியூர் வீரட்டன்
        தனமுனேதனக் கின்மையோதம
        ராயினாரண்ட மாளத்தான்
        வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
        வையமாப்பலி தேர்ந்ததே.     01
    401.     உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர்
        வாயமாதவம் பேணுவீர்
        கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர்
        வீரட்டத்துறை காதலான்
        பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
        வைத்ததும்பெரு நீரொலி
        வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
        மங்கையாளுட னாகவே.     02
    402.     அடியராயினீர் சொல்லுமின்னறி
        கின்றிலேன்அரன் செய்கையைப்
        படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
        வீரட்டத்துறை பான்மையான்
        முடிவுமாய்முத லாயிவ்வைய
        முழுதுமாயழ காயதோர்
        பொடியதார்திரு மார்பினிற்புரி
        நூலும்பூண்டெழு பொற்பதே.     03
    403.    பழையதொண்டர்கள் பகருமின்பல
        வாயவேதியன் பான்மையைக்
        கழையுலாம்புனல் மல்குகாவிரி
        மன்னுகண்டியூர் வீரட்டன்
        குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
        குன்றின்மங்கை வெருவுறப்
        புழைநெடுங்கைநன் மாவுரித்தது
        போர்த்துகந்த பொலிவதே.     04
    404.     விரவிலாதுமைக் கேட்கின்றேனடி
        விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
        கரவெலாந்திரை மண்டுகாவிரிக்
        கண்டியூருறை வீரட்டன்
        முரவமொந்தை முழாவொலிக்க
        முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
        பரவுவானவர்க் காகவார்கடல்
        நஞ்சமுண்ட பரிசதே     05
    405.    இயலுமாறெனக் கியம்புமின்னிறை
        வன்னுமாய்நிறை செய்கையைக்
        கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
        கண்டியூருறை வீரட்டன்
        புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
        காகவன்றயன் பொய்ச்சிரம்
        அயனகவ்வ தரிந்துமற்றதில்
        ஊனுகந்த அருத்தியே.     06
    406.    திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
        செல்வன்றன்னது திறமெலாங்
        கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு
        கண்டியூருறை வீரட்டன்
        இருந்துநால்வரோ டால்நிழல்லறம்
        உரைத்ததும்மிகு வெம்மையார்
        வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
        மூன்றுமாட்டிய வண்ணமே     07
    407.     நாவிரித்தரன் தொல்புகழ்பல
        பேணுவீரிறை நல்குமின்
        காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
        வீரட்டத்துறை கண்ணுதல்
        கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய
        கொள்கையுங்கொடி வரைபெற
        மாவரைத்தலத் தாலரக்கனை
        வலியைவாட்டிய மாண்பதே.     08
    408.     பெருமையேசர ணாகவாழ்வுறு
        மாந்தர்காளிறை பேசுமின்
        கருமையார்பொழில் சூழுந்தண்வயல்
        கண்டியூருறை வீரட்டன்
        ஒருமையாலுயர் மாலும்மற்றை
        மலரவன்னுணர்ந் தேத்தவே
        அருமையாலவ ருக்குயர்ந்தெரி
        யாகிநின்றஅத் தன்மையே.     09
    409.     நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள்
        நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
        கமரழிவயல் சூழுந்தண்புனற்
        கண்டியூருறை வீரட்டன்
        தமரழிந்தெழு சாக்கியச்சமண்
        ஆதரோது மதுகொளா
        தமரரானவர் ஏத்தஅந்தகன்
        றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.     10
    410.     கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
        வீரட்டத்துறை கள்வனை
        அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
        கேட்டுகந்த வினாவுரை
        திருத்தமாந்திகழ் காழிஞானசம்
        பந்தன்செப்பிய செந்தமிழ்
        ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
        உரைசெய்வா ருயர்ந்தார்களே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.
    இறை உத்தரவு.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 039 திருஆலவாய்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    411     மானின்நேர்விழி மாதராய்வழு
        திக்குமாபெருந் தேவிகேள்
        பானல்வாயொரு பாலனீங்கிவன்
        என்றுநீபரி வெய்திடேல்
        ஆனைமாமலை ஆதியாய
        இடங்களிற்பல அல்லல்சேர்
        ஈனர்கட்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     01
    412.    ஆகமத்தொடு மந்திரங்க
        ளமைந்தசங்கத பங்கமாப்
        பாகதத்தொ டிரைத்துரைத்த
        சனங்கள்வெட்குறு பக்கமா
        மாகதக்கரி போல்திரிந்து
        புரிந்துநின்றுணும் மாசுசேர்
        ஆகதர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     02
    413.    அத்தகுபொருள் உண்டுமில்லையு
        மென்றுநின்றவர்க் கச்சமா
        ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
        அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
        சத்திரத்தின் மடிந்தொடிந்து
        சனங்கள்வெட்குற நக்கமே
        சித்திரர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     03
    414.    சந்துசேனனும் இந்துசேனனுந்
        தருமசேனனுங் கருமைசேர்
        கந்துசேனனுங் கனகசேனனும்
        முதலதாகிய பெயர்கொளா
        மந்திபோல்திரிந் தாரியத்தொடு
        செந்தமிழ்ப்பயன் அறிகிலா
        அந்தகர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     04
    415.    கூட்டினார்கிளி யின்விருத்தம்
        உரைத்ததோரொலி யின்தொழிற்
        பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
        எக்கர்தங்களைப் பல்லறங்
        காட்டியேவரு மாடெலாங்கவர்
        கையரைக்கசி வொன்றிலாச்
        சேட்டைகட்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     05
    416.    கனகநந்தியும் புட்பநந்தியும்
        பவணநந்தியுங் குமணமா
        சுனகநந்தியுங் குனகநந்தியுந்
        திவணநந்தியும் மொழிகொளா
        அனகநந்தியர் மதுவொழிந்தவ
        மேதவம்புரி வோமெனுஞ்
        சினகருக்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     06
    417.     பந்தணம்மவை யொன்றிலம்பரி
        வொன்றிலம்மென வாசக
        மந்தணம்பல பேசிமாசறு
        சீர்மையின்றிய நாயமே
        அந்தணம்மரு கந்தணம்மதி
        புத்தணம்மது சித்தணச்
        சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     07
    418.    மேலெனக்கெதி ரில்லையென்ற
        அரக்கனார்மிகை செற்றதீப்
        போலியைப்பணி யக்கிலாதொரு
        பொய்த்தவங்கொடு குண்டிகை
        பீலிகைக்கொடு பாயிடுக்கி
        நடுக்கியேபிறர் பின்செலுஞ்
        சீலிகட்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     08
    419.    பூமகற்கும் அரிக்குமோர்வரு
        புண்ணியன்னடி போற்றிலார்
        சாமவத்தையி னார்கள்போல்தலை
        யைப்பறித்தொரு பொய்த்தவம்
        வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
        யட்டிவாய்சக திக்குநேர்
        ஆமவர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     09
    420.    தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
        தரிப்பொணாதநற் சேவடி
        எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
        கேமடுத்தொரு பொய்த்தவம்
        பொங்குநூல்வழி யன்றியேபுல
        வோர்களைப்பழிக் கும்பொலா
        அங்கதர்க்கெளி யேனலேன்திரு
        ஆலவாயரன் நிற்கவே.     10
    421.    எக்கராம்அமண் கையருக்கெளி
        யேனலேன்திரு ஆலவாய்ச்
        சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
        கும்முடித்தென்னன் முன்னிவை
        தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
        நாதன்ஞானசம் பந்தன்வாய்
        ஒக்கவேயுரை செய்தபத்தும்
        உரைப்பவர்க்கிடர் இல்லையே.     11
    இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள்
    எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய
    திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது;
    சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக்
    குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து
    கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 040 தனித்திருவிருக்குக்குறள்
    பொது - திருப்பதிகம்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    (முதல் திருமுறையிற் போலப் பாடல் அடிகள் நான்காகக் கொள்ளப்படும்.)

    422. .    கல்லால் நீழல், அல்லாத் தேவை
    நல்லார் பேணார், அல்லோம் நாமே.     01
    423. .    கொன்றை சூடி, நின்ற தேவை
    அன்றி யொன்று, நன்றி லோமே.     02
    424. .    கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
    சொல்லா தாரோ, டல்லோம் நாமே.     03
    425. .    கூற்று தைத்த, நீற்றி னானைப்
    போற்று வார்கள், தோற்றி னாரே.     04
    426. .    காட்டு ளாடும், பாட்டு ளானை
    நாட்டு ளாருந், தேட்டு ளாரே.     05
    427. .    தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
    மிக்க தேவர், பக்கத் தோமே.     06
    428. .    பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
    நண்ணா தாரை, எண்ணோம் நாமே.     07
    429..    தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
    ஆத்த மாக, ஏத்தி னோமே.     08
    430..    பூவி னானுந், தாவி னானும்
    நாவி னாலும், ஓவி னாரே.     09
    431..    மொட்ட மணர், கட்ட தேரர்
    பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.     10
    432. .    அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
    சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 041 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    433     கருவார் கச்சித், திருவே கம்பத்
    தொருவா வென்ன, மருவா வினையே.    01
    434. .    மதியார் கச்சி, நதியே கம்பம்
    விதியா லேத்தப், பதியா வாரே.     02
    435..    கலியார் கச்சி, மலியே கம்பம்
    பலியாற் போற்ற, நலியா வினையே.     03
    436. .    வரமார் கச்சிப், புரமே கம்பம்
    பரவா ஏத்த, விரவா வினையே.     04
    437..    படமார் கச்சி, இடமே கம்பத்
    துடையா யென்ன, அடையா வினையே.    05
    438. .    நலமார் கச்சி, நிலவே கம்பம்
    குலவா வேத்தக், கலவா வினையே.     06
    439..    கரியின் னுரியன், திருவே கம்பன்
    பெரிய புரமூன், றெரிசெய் தானே.     07
    440. .    இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
    நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.    08
    441..    மறையோன் அரியும், அறியா வனலன்
    நெறியே கம்பம், குறியால் தொழுமே.     09
    442..    பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
    செறிகொள் கம்பம், குறுகு வோமே.     10
    443..    கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
    மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 042 திருச்சிற்றேமம்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    444     நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
    குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
    சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
    இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.    01
    445..    மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
    பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
    மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்
    ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.     02
    446..    நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
    கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
    படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
    கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.     03
    447..    கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
    முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
    எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
    அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.     04
    448. .    வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
    கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
    தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
    மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.     05
    449..    பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
    குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
    தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
    முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.     06
    450. .    கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
    வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
    தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
    ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.    07
    451..    சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
    போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
    தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
    ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.     08
    452..    தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
    துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
    அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
    மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.    09
    453. .    வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
    பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
    உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
    கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.     10
    454..    கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
    நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
    செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
    வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர், தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 043 சீகாழி
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    455     சந்த மார்முலை யாள்தன கூறனார்
    வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
    கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
    எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.     01
    456..    மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
    தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார்
    கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
    ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.     02
    457..    மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
    பைகொள் வாளர வாட்டும் படிறனார்
    கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
    ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.     03
    458. .    புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்
    கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
    பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
    உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.     04
    459..    நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
    மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
    கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
    அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.     05
    460..    பெண்ணோர் கூறினர் பேயுடன் ஆடுவர்
    பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
    கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
    அண்ண லாய அடிகள் சரிதையே.     06
    461..    பற்று மானும் மழுவும் அழகுற
    முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
    கற்ற மாநன் மறையவர் காழியுட்
    பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.     07
    462..    எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
    அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்
    கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
    இடத்து மாதொடு தாமும் இருப்பரே.     08
    463..    காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
    மாலு நான்முகன் தானும் வனப்புற
    ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச்
    சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.    09
    464..    உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
    தருவ லாடையி னாருந் தகவிலர்
    கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
    ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.     10
    465..    கானல் வந்துல வுங்கடற் காழியுள்
    ஈன மில்லி இணையடி யேத்திடும்
    ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
    மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 044 திருக்கழிப்பாலை
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    466     வெந்த குங்கிலி யப்புகை விம்மவே
    கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்
    அந்த மும்மள வும்மறி யாததோர்
    சந்த மாலவர் மேவிய சாந்தமே.     01
    467..    வானி லங்க விளங்கும் இளம்பிறை
    தான லங்கல் உகந்த தலைவனார்
    கானி லங்க வருங்கழிப் பாலையார்
    மான லம்மட நோக்குடை யாளொடே.    02
    468. .    கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்
    பொடிகொள் மார்பினிற் பூண்டதோர் ஆமையர்
    கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
    அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.     03
    469. .    பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
    தண்ண லங்கல் உகந்த தலைவனார்
    கண்ண லங்க வருங்கழிப் பாலையுள்
    அண்ண லெங்கட வுள்ளவ னல்லனே.     04
    470..    ஏரி னாருல கத்திமை யோரொடும்
    பாரி னாருட னேபர வப்படுங்
    காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெஞ்
    சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.     05
    471. .    துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்
    கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
    கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
    உள்ளு வார்வினை யாயின வோயுமே.    06
    472..    மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
    எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
    பெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமுக்
    கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.     07
    473. .    இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்
    துலங்க வூன்றிய தூமழு வாளினார்
    கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
    வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.     08
    474. .    ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்
    தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
    காட்சி யாலறி யான்கழிப் பாலையை
    மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.     09
    475..    செய்ய நுண்துவ ராடையி னாரொடு
    மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
    கையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்
    ஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.     101
    476..    அந்தண் காழி அருமறை ஞானசம்
    பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
    சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
    முந்தி வானுல காடன் முறைமையே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 045 திருவாரூர்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    477     அந்த மாயுல காதியு மாயினான்
    வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
    சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
    எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.     01
    478..    கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த
    ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
    திருத்த னேதிரு ஆரூரெந் தீவண்ண
    அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.    02
    479. .    மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
    இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
    சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்
    இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.     03
    480..    பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிந்
    தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
    செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
    அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.     04
    481. .    குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
    விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
    திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
    வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.    05
    482..    வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
    ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன்
    சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
    ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே.     06
    483..    வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
    துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
    திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
    இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.    07
    484. .    இலங்கை மன்னன் இருபது தோளிறக்
    கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
    வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
    அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.     08
    485. .    நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
    படிய வன்பனி மாமதிச் சென்னியான்
    செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
    அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ.    09
    486..    மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள்
    காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
    தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம்
    ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.     10
    487. .    வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்
    சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
    மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
    பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 046 திருக்கருகாவூர்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    488     முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
    மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
    கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
    அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.    01
    489..    விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
    கமுத நீழலக லாததோர் செல்வமாங்
    கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
    அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     02
    490. .    பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
    குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
    கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
    அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     03
    491. .    பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
    செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
    கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
    அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     04
    492. .    மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
    செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
    கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
    ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     05
    493..    மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
    ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
    காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
    ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.    06
    494..    வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
    சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
    கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
    எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.     07
        இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     08
    495..    பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
    மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
    கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
    அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     09
    496..    போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
    தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
    கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
    ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.     10
    497..    கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
    நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
    குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
    சொலவ லாரவர் தொல்வினை தீருமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர், தேவியார் - கரும்பனையாளம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 047 திருஆலவாய்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    498     காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
    நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
    வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.     01
    499. .    மத்த யானையின் ஈருரி மூடிய
    அத்த னேயணி ஆலவா யாய்பணி
    பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
    சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.     02
    500..    மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்
    திண்ண கத்திரு ஆலவா யாயருள்
    பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
    தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.    03
    501..    ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
    வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
    ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
    நீதி யாக நினைந்தருள் செய்திடே.     04
    502..    வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
    செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
    கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
    பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.     05
    503..    நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
    தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
    வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
    சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.     06
    504. .    பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்
    தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
    அண்ட னேயமண் கையரை வாதினில்
    செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.     07
    505. .    அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்
    செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்
    பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்
    கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.     08
    506. .    மாலும் நான்முக னும்மறி யாநெறி
    ஆல வாயுறை யும்மண்ண லேபணி
    மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
    சால வாதுசெ யத்திரு வுள்ளமே.     09
    507. .    கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
    அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
    தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
    மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.     10
    508.    செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
    மைந்த னேயென்று வல்லம ணாசறச்
    சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
    பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 048 திருமழபாடி
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    509     அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
    கங்கை யான்கட வுள்ளிட மேவிய
    மங்கை யானுறை யும்மழ பாடியைத்
    தங்கை யாற்றொழு வார்தக வாளரே.     01
    510.    விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
    கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
    மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
    நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.     02
    511.     முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
    குழுவி னான்குல வுங்கையி லேந்திய
    மழுவி னானுறை யும்மழ பாடியைத்
    தொழுமின் நுந்துய ரானவை தீரவே.     03
    512.    கலையி னான்மறை யான்கதி யாகிய
    மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
    சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
    தலையி னால்வணங் கத்தவ மாகுமே.    04
    513.    நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
    கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
    செல்வன் மேய திருமழ பாடியைப்
    புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.     05
    514.    நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
    ஆடி னானெரி கானிடை மாநடம்
    பாடி னாரிசை மாமழ பாடியை
    நாடி னார்க்கில்லை நல்குர வானவே.    06
    515.    மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
    மன்னி னானுறை மாமழ பாடியைப்
    பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
    துன்னி னார்வினை யாயின வோயுமே.     07
    516.    தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
    தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
    மன்னி லங்கிய மாமழ பாடியை
    உன்னி லங்க வுறுபிணி யில்லையே.     08
    517.    திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
    மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
    உருவி னானுறை யும்மழ பாடியைப்
    பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.     09
    518.    நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
    வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
    ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
    மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.     10
    519.    மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
    எந்தை சந்தம் இனிதுகந் தேத்துவான்
    கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
    பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 049 நமச்சிவாயத் திருப்பதிகம்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    520     காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே.     01
    521.    நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
    வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
    செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
    நம்பன் நாமம் நமச்சி வாயவே.    02
    522.     நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
    தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
    தக்க வானவ ராத்தகு விப்பது
    நக்கன் நாமம் நமச்சி வாயவே.    03
    523.    இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
    நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
    நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
    நயனன் நாமம் நமச்சி வாயவே.     04
    524.     கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
    இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
    எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
    நல்லார் நாமம் நமச்சி வாயவே.     05
    525.     மந்த ரம்மன பாவங்கள் மேவிய
    பந்த னையவர் தாமும் பகர்வரேல்
    சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
    நந்தி நாமம் நமச்சி வாயவே.     06
    526.    நரக மேழ்புக நாடின ராயினும்
    உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
    விரவி யேபுகு வித்திடு மென்பரால்
    வரதன் நாமம் நமச்சி வாயவே.     07
    527.    இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
    தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
    மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
    நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.     08
    528.     போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
    பாதந் தான்முடி நேடிய பண்பராய்
    யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
    ஓதும் நாமம் நமச்சி வாயவே.     09
    529.     கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
    வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
    விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
    நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.     10
    530.    நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
    சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
    சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
    பந்த பாசம் அறுக்கவல் லார்களே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 050 திருத்தண்டலைநீணெறி
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    531     விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
    சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
    கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
    நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.    01
    532.    இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
    திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
    புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
    நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.     02
    533.    பரந்த நீலப் படரெரி வல்விடங்
    கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
    சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
    நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.    03
    534.     தவந்த என்புந் தவளப் பொடியுமே
    உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
    சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
    நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.     04
        இப்பதிகத்தில் 5, 6, 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     05-07
    535.     இலங்கை வேந்தன் இருபது தோளிற
    விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
    சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
    நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.     08
    536.     கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
    றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
    செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
    நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.     09
    537.    கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
    குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
    சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
    நிலவு தண்டலை நீணெறி காண்மினே.     10
    538.     நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
    தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
    சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
    மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.    11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நீணெறிநாதேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 051 திருஆலவாய்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    539     செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே.     01
    540.    சித்த னேதிரு ஆலவாய் மேவிய
    அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.     02
    541.    தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
    சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பக்க மேசென்று பாண்டியற் காகவே.     03
    542.    சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
    அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
    துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.     04
    543.    நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
    அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.     05
    544.     தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
    அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
    வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
    பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.     06
    545.    செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
    அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
    கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
    பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.     07
    546.    தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
    ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.     08
    547.     தாவி னான்அயன் தானறி யாவகை
    மேவி னாய்திரு ஆலவா யாயருள்
    தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.     09
    548.    எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
    அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
    குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.     10
    549.    அப்பன் ஆலவா யாதி யருளினால்
    வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
    கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
    செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 052 திருஆலவாய் - திருவிராகம்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    550     வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
    பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
    காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
    கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.     01
    551.    பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா
    ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியாக்
    கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய்
    எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.     02
    552.     குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்
    சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
    கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை
    முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.     03
    553.    முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்
    அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
    மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
    சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.     04
    554.     கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய்
    பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையே
    நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ்
    சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.     05
    555.    பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
    பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
    கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
    நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.     06
    556.    ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலே
    சோதியந்த மாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்
    கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
    ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே.     07
    557.     கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற்
    துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
    மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
    நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.     08
    558.    தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங்
    கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
    தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின்
    தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.     09
    559.    தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும்
    போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்
    கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
    நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.     10
    560.    போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
    பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
    ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலைத்
    தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 053 திருவானைக்கா - திருவிராகம்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    561     வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே.     01
    562.     சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
    வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார்
    நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
    வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.     02
    563.    தாரமாய மாதராள் தானோர்பாக மாயினான்
    ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான்
    ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
    வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.     03
    564.    விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடை
    சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
    அண்ணல்கண்ணோர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
    எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.     04
    565.     வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
    மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
    கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
    ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.     05
    566.    நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
    பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
    ஆணும்பெண்ணு மாகிய ஆனைக்காவில் அண்ணலார்
    காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொள்மிடறன் அல்லனே.    06
    567.    கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
    பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
    பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை
    ஆரநீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.     07
    568.     பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
    அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
    பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
    முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே.     08
    569.    ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென
    ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்
    வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்
    றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.     09
    570.     கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும்
    மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
    தையல்பாக மாயினான் தழலதுருவத் தானெங்கள்
    ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.     10
    571.    ஊழியூழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும்
    ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
    காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
    வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 054 திருப்பாசுரம்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    572     வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.     01
    573.    அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
    எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
    கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
    பெரிய ராரறி வாரவர் பெற்றியே.     02
    574.     வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
    தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
    சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
    எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.     03
    575.     ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
    கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
    கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
    தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.     04
    576.    ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
    மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
    சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.     05
    577.     ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
    பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
    கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
    நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.     06
    578.     கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
    படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
    முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
    அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.     07
    579.     வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
    ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
    பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
    சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.     08
    580.    பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
    பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
    நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
    போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.     09
    581.    மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
    பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
    காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
    ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.     10
    582.    அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
    தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
    பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
    பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.    11
    583.    நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
    எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
    பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
    வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.     12
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 055 திருவான்மியூர்
    பண் - கௌசிகம்
    திருச்சிற்றம்பலம்

    584     விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
    உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்
    திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
    அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.     01
    585.     இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
    கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
    செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
    அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.     02
    586.    கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே
    மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே
    செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
    ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.     03
    587.     பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
    மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
    தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
    அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.     04
    588.    கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
    எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
    திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
    அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.     05
    589.    நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
    ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்
    சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
    ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே.     06
    590.    வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்
    கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்
    தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
    ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே.     07
    591.     பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
    நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
    செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
    அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே.     08
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     09
    592.     குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
    கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
    திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
    அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.     10
    593.    கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
    நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை
    சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்
    குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 056 திருப்பிரமபுரம்
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    594     இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற
    கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று
    மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னிப்
    பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே.     01
    595.    சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவாட்
    படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை பல்கலைநூல்
    உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும்
    பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே.     02
    596.    மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி
    காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை
    ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும்
    பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே.     03
    597.    பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்ட
    பேரிடர்த் தேவர்கணம் பெருமானிது காவெனலும்
    ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே
    பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே.     04
    598.     நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங்
    கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல
    இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும்
    பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே.     05
    599.     பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற்
    செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்திட்
    டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே
    பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.     06
    600.    வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
    கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
    ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
    பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.     07
    601.    இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி
    அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்பக்
    குமையது செய்துபாடக் கொற்றவாளொடு நாள்கொடுத்திட்
    டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே.     08
    602.    ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி
    காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி
    ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய்
    ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.     09
    603.     துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர்
    அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர்
    கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த
    இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே.     10
    604.    உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
    வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்
    தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
    விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 057 திருவொற்றியூர்
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    605     விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட்
    படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச்
    சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ
    டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.     01
    606.     பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்
    சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்
    தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா
    ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.     02
    607.    விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
    அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி
    களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
    ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.     03
    608.     அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார்
    விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை
    பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல்
    உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.     04
    609.     விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
    பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
    அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
    துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.     05
    610.    கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச்
    சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும்
    அமையொடு நீண்டதிண்டோ ள் அழகாயபொற் றோடிலங்க
    உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.     06
    611.    நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே
    கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப்
    பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம்
    பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.     07
    612.    பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல்
    சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
    தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ்
    ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.     08
    613.    திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித்
    தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து
    பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
    டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.     09
    614.    தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்
    ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக்
    கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்
    ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.     10
    615.    ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச்
    சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
    பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார்
    விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 058 திருச்சாத்தமங்கை
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    616     திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
    இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
    பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
    அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.     01
    617.     பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
    கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
    கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
    அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.     02
    618.    நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி
    மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
    தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
    ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.     03
    619.    மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி
    புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
    கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்
    அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.     04
    620.    வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
    பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
    சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
    அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.     05
    621.    வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்
    சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே
    சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
    ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.     06
    622.    இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
    உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
    சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
    அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.     07
    623.    பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
    விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
    தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
    அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.     08
    624.     பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
    ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
    காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
    ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.     09
    625.     கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
    மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
    சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
    அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.     10
    626.    மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
    நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
    அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
    முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அயவந்தீசுவரர், தேவியார் - மலர்க்கணம்பிகையம்மை.
    சாத்தமங்கை என்பது ஸ்தலம், அயவந்தி என்பது ஆலயம்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 059 திருக்குடமூக்கு
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    627     அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
    குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
    இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.     01
    628.     ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
    பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
    கூத்தர வங்களோவாக் குழகன்குட மூக்கிடமா
    ஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே.     02
    629.     மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும்
    பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
    குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
    இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.     03
    630.    மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
    அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
    கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
    எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.     04
    631.    வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
    பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்
    கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமா
    இடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.     05
    632.    கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
    தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
    குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
    இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.     06
    633.     மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
    சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்
    குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா
    இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.    07
    634.     நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
    படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழடர்த்தான்
    கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமா
    இடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே.     08
    635.     ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
    நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
    கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
    ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.     09
    636.     மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்
    நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
    கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமா
    ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே.     10
    637.    வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்
    நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
    தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
    விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கும்பேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 060 திருவக்கரை
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    638     கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
    பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
    மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்
    உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.     01
    639.    பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதா
    ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்ச
    வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
    தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.     02
    640.    சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்
    இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
    அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
    மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.     03
    641.    நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்
    கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
    மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
    மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.     04
    642.    ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்து
    கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
    மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
    தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.     05
    643.     கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
    நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
    வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
    பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.     06
    644.    கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்
    தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்
    வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
    ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.     07
    645.    இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
    கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
    நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
    வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.     08
    646.    காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
    சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
    சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
    வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.     09
    647.    மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
    தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்
    பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்
    வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.     10
    648.    தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
    வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்
    சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
    பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 061 திருவெண்டுறை
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    649     ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்
    பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்
    போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
    வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே.     01
    650.    காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
    பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
    மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்
    வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே.     02
    651.     படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்
    கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
    உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடிய
    விடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     03
    652.    பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
    எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
    பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்
    விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     04
    653.    பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
    சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான்
    போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையா
    வீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     05
    654.    ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்
    போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்
    யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்
    வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     06
    655.    கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறிப்
    பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
    சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள்
    வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.     07
    656.    கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த
    சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்
    பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்
    விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     08
    657.     கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ்
    சீலம றிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான்
    மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
    வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே.     09
    658.    நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம்
    பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன்
    திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம்
    மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.     10
    659.    திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
    தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்
    எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன
    பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வெண்டுறைநாதேசுவரர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 062 திருப்பனந்தாள்
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    660     கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
    பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
    விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
    தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     01
    661.    விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
    எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
    பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்
    தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     02
    662.    உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
    கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்
    மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
    தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     03
    663.     சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
    பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
    போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
    தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.    04
    664.    விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
    நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
    படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்
    தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     05
    665.     விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
    புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
    தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
    சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     06
    666.     மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்
    சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
    அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
    தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     07
    667.     செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
    முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
    புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்
    தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     08
    668.     வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
    புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
    நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்
    தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     09
    669.     ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
    நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
    போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்
    தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.     10
    670.    தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்
    கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
    நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
    பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 063 திருச்செங்காட்டங்குடி
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    671     பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
    சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
    வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.     01
    672.    பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்
    அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்
    கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
    இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே.     02
    673.    குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
    இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
    சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.     03
    674.     கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
    மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
    தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.     04
    675.     ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
    பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
    சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.     05
    676.     குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
    துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
    கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய
    சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.    06
    677.     கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
    ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
    செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.     07
    678.    கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்
    தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
    சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.     08
    679.     நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்
    அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
    சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
    பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.     09
        இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     10
    680.     செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
    வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
    அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்
    சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.     11
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 064 திருப்பெருவேளூர்
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    681     அண்ணாவுங் கழுக்குன்றும் ஆயமலையவை வாழ்வார்
    விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
    கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
    பெண்ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     01
    682.     கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்
    மருமானார் இவரென்றும் மடவாளோ டுடனாவர்
    பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
    பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.     02
    683.     குணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங்
    கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
    வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
    பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     03
    684.     இறைக்கண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு
    மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்
    கறைக்கொண்ட மிடறுடையார் கனல்கிளருஞ் சடைமுடிமேல்
    பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     04
    685.    விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
    குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி
    அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
    பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     05
    686.     விரித்தார்நாண் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்
    உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
    எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
    பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     06
    687.    மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாஞ்
    சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால்
    இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடிலார்
    பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     07
    688.    எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் தனைவீழ
    முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
    வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
    பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     08
    689.    சேணியலும் நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்
    காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ணர் அடியிணைக்கீழ்
    நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து
    பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     09
    690.    புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்
    சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
    மற்றேரும் பரிமாவும் மதகளிரும் இவையொழியப்
    பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     10
    691.    பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி
    அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
    நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
    சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரியாவீசுவரர், தேவியார் - மின்னனையாளம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 065 திருக்கச்சிநெறிக்காரைக்காடு
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    692     வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினிற்
    போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
    காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
    நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.     01
    693.     காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்
    டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
    தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
    நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.     02
    694.    கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோ
    டாறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
    ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
    நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     02
    695.     பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
    மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
    சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
    நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     04
    696.     அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்
    குன்றாத வெஞ்சிலையிற் கோளரவம் நாண்கொளுவி
    ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
    நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     05
    697.     பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
    நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
    வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
    நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காறைக் காட்டாரே.     06
    698.    புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
    எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
    பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
    நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     07
    699.    ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
    தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
    ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
    நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     08
    700.    ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
    மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
    பூண்டாரும் ஓரிருவர் அறியாமைப் பொங்கெரியாய்
    நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     09
    701.     குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
    மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
    வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகங்
    கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.     10
    702.    கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
    பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
    தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர், தேவியார் - காரார்குழலியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    3. 066 திருவேட்டக்குடி
    பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்

    703     வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்
    கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
    தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்
    தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.    01
    704.     பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்குங்
    காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
    போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
    தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.     01
    705.    தோத்திரமா மணலிலிங்கத் தொடங்கியஆன் நிரையிற்பால்
    பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
    ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
    தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.     03
    706.    கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
    அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
    நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந்
    திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.    04
    707.     பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
    செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
    அங்கம்நான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
    திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.     05
    708.     நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
    கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
    ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
    தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.     06
    709.    பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
    கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
    மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
    தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.     07
    710.    துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
    நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
    இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்
    திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.     08
    711.     அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்
    இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
    வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
    திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.     09
    712.     இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
    புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
    நிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
    திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.     10
    713.     தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
    தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
    உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.