தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும் பன்முக ஆளுமையாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும். தாய்மொழியை எப்படி நேசிக்க வேண்டும்; உச்சரிக்க வேண்டும் என அய்யா #அப்துல்ஜப்பார் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வித்துறையில் மட்டுமே இருந்த தமிழை விளையாட்டுத் துறையில் வளர்த்தவர் திரு.அப்துல் சபார். கிரிக்கெட்டுக்கு இவர் தந்த நல்ல தமிழ் வருணனைகள் சாகா வரம் பெற்றவை. ஏனென்றால் இவரைப் போன்றோர் வளர்த்த தமிழை இன்று கிரிக்கெட்டில் பட்டுப் போகவிட்டோம்.
|