LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திரு அம்மானை

 

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய 
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி 
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு 
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் 
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் 
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175 
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் 
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய 
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி 
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த 
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் 
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் 
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி 
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் 
சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான் 
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த 
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177 
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் 
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய 
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு 
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து 
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த 
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178 
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை 
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் 
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை 
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் 
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் 
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179 
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் 
திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் 
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் 
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி 
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த 
ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180 
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் 
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் 
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை 
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் 
தாயான தத்துவனைத் தானே உலகேழும் 
ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181 
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் 
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் 
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் 
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் 
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் 
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை 
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் 
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் 
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் 
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட 
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184 
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் 
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் 
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த 
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே 
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் 
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185 
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் 
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் 
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து 
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் 
எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் 
அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட 
மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் 
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் 
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு 
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை 
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் 
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை 
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து 
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய 
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் 
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் 
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து 
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் 
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து 
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் 
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து 
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் 
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் 
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் 
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் 
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் 
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று 
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் 
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் 
வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி 
ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை 
வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் 
தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் 
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் 
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ 
அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் 
பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் 
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் 
தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை 
என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை 
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் 
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 
சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே 
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194 

 

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய 

பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி 

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு 

தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் 

அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் 

அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175 

 

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் 

ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய 

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி 

வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த 

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் 

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 

 

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் 

அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி 

எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் 

சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான் 

பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த 

அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177 

 

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் 

கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய 

தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு 

ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து 

தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த 

வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178 

 

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை 

வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் 

கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை 

வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் 

தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் 

ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179 

 

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் 

திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் 

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் 

தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி 

நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த 

ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180 

 

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் 

சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் 

மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை 

நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் 

தாயான தத்துவனைத் தானே உலகேழும் 

ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181 

 

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் 

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு 

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 

 

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் 

கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் 

கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் 

அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் 

பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் 

அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 

 

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை 

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் 

தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் 

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் 

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட 

அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184 

 

செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் 

தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் 

அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த 

அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே 

ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் 

அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185 

 

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் 

எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் 

இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து 

மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் 

எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் 

அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 

 

கையார் வளைசிலம்பக் காதர் குழையாட 

மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் 

செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் 

கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு 

மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை 

ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 

 

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் 

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை 

ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து 

தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய 

கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் 

வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 

 

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் 

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து 

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் 

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து 

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் 

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 

 

ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து 

தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் 

வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் 

தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் 

ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் 

கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 

 

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் 

கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று 

ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் 

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் 

வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி 

ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 

 

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை 

வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் 

தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் 

எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் 

ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ 

அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 

 

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் 

பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் 

மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் 

தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை 

என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை 

அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 

 

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 

கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் 

குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 

சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே 

பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 

பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.