LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருச்சாழல் - சிவனுடைய காருணியம்

 

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் 
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ 
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை 
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255 
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் 
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? 
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் 
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256 
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை 
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ 
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் 
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257 
அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை 
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ 
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால் 
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258 
தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் 
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? 
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு 
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259 
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் 
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? 
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் 
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260 
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி 
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? 
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் 
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261 
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த 
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? 
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட 
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262 
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் 
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ 
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் 
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263 
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை 
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ 
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் 
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264 
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து 
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ 
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் 
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265 
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி 
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி? 
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் 
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266 
மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை 
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ 
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங் 
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267 
தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் 
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? 
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் 
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268 
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே 
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ 
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் 
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269 
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை 
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ 
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங் 
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270 
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும் 
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? 
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ 
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271 
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ? 
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ் 
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272 
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் 
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ 
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் 
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273 
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் 
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ? 
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் 
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274 

 

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் 

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ 

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை 

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255 

 

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் 

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? 

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் 

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256 

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை 

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ 

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் 

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257 

 

அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை 

வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ 

நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால் 

சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258 

 

தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் 

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? 

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு 

எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259 

 

அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் 

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? 

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் 

சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260 

 

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி 

சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? 

சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் 

பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261 

 

கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த 

ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? 

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட 

மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262 

 

தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் 

பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ 

பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் 

விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263 

 

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை 

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ 

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் 

வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264 

 

நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து 

கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ 

கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் 

தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265 

 

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி 

ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி? 

ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் 

வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266 

 

மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை 

உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ 

உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங் 

கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267 

 

தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் 

தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? 

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் 

ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268 

 

கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே 

இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ 

தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் 

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269 

 

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை 

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ 

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங் 

கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270 

 

அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும் 

நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? 

நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ 

எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271 

 

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 

நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ? 

நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ் 

அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272 

 

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் 

எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ 

எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் 

தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273 

 

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் 

இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ? 

அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் 

திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.