|
||||||||
திருக்கை வழக்கம் |
||||||||
கலிவெண்பா
திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை
கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங் கை. 1
சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்
திங்கள் அணி
எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை. 2
முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்
அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை. 3
எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்
கிளை வாழக்
கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை. 4
ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்
பச்சை மிகு
தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
ஆமா மெனவே அரிந்திடுங் கை. 5
தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்
வாம மறை
ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
மோது தடிகொண்டு முடுகுங் கை. 6
திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்
தீ தகல
அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை. 7
ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்
வஞ்சியர் பால்
தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறக் தன்வயிறு பீறும் கை. 8
சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்
பூதத்தின்
மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை. 9
வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்
மைக் கடு வாய்
மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை. 10
உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை
ஆக்கமுடன்
ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. 11
மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை
மேதினியில்
சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்குங் கை. 12
தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்
சாலவே
நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங் கை. 13
தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை
காணவே
தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை. 14
நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்
கண் டளவில்
நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
கோலி யபயம் கொடுக்குங் கை. 15
நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி
ஆல மெனும்
வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை. 16
உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி
துன்னு மொரு
பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை. 17
தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்
பா ரறிய
வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை. 18
புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்
ஆறாத்
தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங் கை. 19
நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை
கடல் சூழ்ந்த
பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. 20
காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை
வீரமதன்
ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை. 21
மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை
இங்கிதமாம்
சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்குங் கை. கார்படைத்த 22
உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை
மிஞ்சுமதி கீர்த்த்யைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றை தெளிக்குங் கை. 23
கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை
எஞ்சாமல்
வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை. 24
க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை
வள் ளுறையும்
விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை. 25
மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை
கற்பகம் போல்
மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
வாழிக் கொடியே மருவுங் கை. 26
வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்
நீ ளுலகில்
ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங் கை. 27
பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை
நீதிநெறி
மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தழைக்குங் கை. 28
நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை
ஆன தமிழ்
கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை. 29
ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை
வல்லமை சேர்
மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மா றிலா தளித்த கற்பகக் கை. 30
பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை
சும்மை ஆர்
ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை. 31
உற்றபோது வுடனுதவும் தண்கை
பாரில்
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கோடுக்க இசைந்த குளிர் கை. 32
மூவருக்கும் முதலான மூலமாங்கை
இடுக்கணினால்
மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை. 33
இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்
தே மருவு
நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை. 34
விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை
பாவலர் தாம்
ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகங் கடிக்குங் கை. 35
பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்
பா ரறியச்
சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை. 36
என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்
பொங்கமொடு
செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை. 37
வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை
அம்பொன்
விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதி லிட்டு வருங் கை. 38
எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை
கள மதனில்
ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை. 39
ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை
தீர்க்கமதாத்
திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை. 40
கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை
திருப்புகழை
எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா குள கை. பண்ணமைந்த 41
நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்
வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை. 42
புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை
பூதலத்தில்
பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
தாவலுடன் நன்றா கருந்துங் கை. 43
மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்
காவலன்
மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை. 44
தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்
திண்ணமதாய்
வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை. 45
வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்
துய்ய புகழ்
அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக் கை. 46
வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்
திட்டமுடன்
பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
நன் நாவலர்க் களித்த நாணயக்கை. 47
வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்
முன்னாள்
மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தண் கை. 48
ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை
கனக்கவே
அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை. 49
பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை
வென்றி தரும்
ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை. 50
பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை
பே ரியலைச்
சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை. 51
சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்
நேர்த்திபெற
வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை. 52
முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை
புண்டரிகக்
கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி யிட்ட கை. 53
அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்
நொய்ய
எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை. 54
முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை
பறம்பு தனில்
எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை. 55
விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை
விண்ணாடர்
கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை. 56
சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை
சீர்குகனை
ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதாரவிந்தம் பணியும் கை. 57
படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை
நீதி
நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க் கை. 58
எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்
தொடுத்த தெல்லாம்
சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை. 59
திருக்கை வழக்கம் முற்றிற்று
கலிவெண்பா |
||||||||
by Swathi on 23 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|