LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்

 

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த 
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் 
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் 
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215 
நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் 
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி 
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் 
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே 
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் 
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் 
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி 
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் 
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 
அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் 
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே 
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற 
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 
வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் 
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் 
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த 
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220 
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் 
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை 
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் 
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221 
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு 
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த 
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் 
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222 
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் 
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு 
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த 
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223 
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து 
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் 
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் 
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224 
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே 
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட 
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் 
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225 
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் 
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் 
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் 
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226 
நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் 
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் 
ஆன கருணையும் அங்குற்றே தானவனே 
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227 
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே 
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி 
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட 
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228 
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் 
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் 
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் 
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229 
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் 
கள்ளப் படாத களிவந்த வான்கருணை 
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் 
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230 
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் 
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட 
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் 
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் 
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் 
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் 
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232 
கள்வன் கடியன் கலதியிவன் என்னாத 
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே 
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் 
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233 
பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று 
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க 
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த 
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234 

 

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த 

நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் 

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் 

சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215 

 

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் 

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி 

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் 

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 

 

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே 

நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் 

அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் 

குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 

 

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 

என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி 

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் 

கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 

 

அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் 

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே 

பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற 

மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 

 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் 

பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் 

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த 

வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220 

 

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் 

கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை 

ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் 

சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221 

 

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு 

நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த 

என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் 

குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222 

 

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் 

சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு 

மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த 

கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223 

 

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து 

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் 

தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் 

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224 

 

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே 

கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட 

அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் 

பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225 

 

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் 

பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் 

சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந் 

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226 

 

நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் 

தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் 

ஆன கருணையும் அங்குற்றே தானவனே 

கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227 

 

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே 

மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி 

அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட 

திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228 

 

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் 

தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் 

வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் 

தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229 

 

உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் 

கள்ளப் படாத களிவந்த வான்கருணை 

வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் 

கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230 

 

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் 

மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட 

ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் 

செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 

 

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் 

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் 

சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் 

கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232 

 

கள்வன் கடியன் கலதியிவன் என்னாத 

வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே 

உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் 

தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233 

 

பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று 

ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க 

நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த 

தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.