2151 |
ஆரம்பரந்தமுலையாய்பங்கேருகத்தண்ணலும்பொற் பேரம்பரந்தகையிற்புனைவானுமுட்பேணிவளங் கூரம்பரந்தமிலாநல்லமேவிகுடந்தைவெற்பிற் காரம்பரந்தவழுஞ்சென்றுளார்வரக்கண்டிலமே. |
21 |
2152 |
கண்டத்திருப்புவயவிடமாவுட்கலங்குபுமா றண்டத்திருப்புவதுமழுவாதண்டமிழ்க்குடந்தை யண்டத்திருப்புவளைஞாலமேத்தவமர்பதியா மண்டத்திருப்புவனச்சடையார்க்கெனுமாமயிலே. |
22 |
2153 |
மாமையிலங்கையரிவிழிபால்வண்குடந்தையனை நாமையிலங்கைநகத்தரிப்பாற்றருநம்பனைவெந் தீமையிலங்கையறச்செற்றவாளிச்சிவனையெண்ணார் தாமையிலங்கையையோவென்செய்வார்வெஞ்சமன்வலிக்கே. |
23 |
2154 |
வல்லியம்பாயும்வனங்குடமூக்குள்வையாரினுயிர் கொல்லியம்பாயும்வன்மீனாற்றின்வாய்க்குலவேதந்துழாய் புல்லியம்பாயும்ப்ராரிறையோயென்புராணர்வெற்பி வல்லியம்பாயும்பலைநேர்பவரிங்கடைதனன்றே. |
24 |
2155 |
அடைக்கலமாலைவளக்குடமூக்கமர்வாய்தலைப்பன் முடைக்கலமாலையணிவாய்மறையின்முழுமுதலே யுடைக்கலமாலைவகைப்பொறியாற்றலுன்றாளுக்கன்பு படைக்கலமாலையறோமெங்ஙன்வாழும்பரிசுளதே. |
25 |
2156 |
உளத்துக்கலந்தகடுந்துயர்யாவுமொழிவதென்றோ களத்துக்கலந்தகவில்லாநஞ்சாகிக்கனலில்விழுந் தளத்துக்கலந்தகமலைமுன்னோரைத்தழைவித்தவா வளத்துக்கலந்தகராக்குடமூக்கமர்மாமுதலே. |
26 |
2157 |
மாமனுக்காட்டுமுகங்கொடுத்தாற்குமதுப்பெய்கொன்றைத் தாமனுக்காட்டுவளப்பதத்தாற்குத்தவாதநல்லோர் நாமனுக்காட்டுகுடந்தைப்பிராற்குநகுதழனீர் காமனுக்காட்டுகண்ணாற்கடியோமுட்கலங்கலமே. |
27 |
2158 |
கலங்கலந்தாரையறியாரினின்றுகைகூப்பினல்கு நலங்கலந்தாரைவளக்குடமூக்கமர்நம்பரைக்கண் டலங்க்லந்தாரையருண்மினென்றேயிவ்வணங்குவிழிக் குதங்கலந்தாரைகவிழ்ப்பநின்றாளென்னகோலமிதே. |
28 |
2159 |
கோலமருப்புமுறித்தார்குடந்தைக்குழகரிந்தக் காலமருப்புமுலையார்க்கருளக்கடவரல ரேலமருப்புகுதும்போதிழிக்குமிருங்குழன்மிக் கோலமருப்புவனஞ்செவிதீத்திடுமொண்டொடியே. |
29 |
2160 |
தொடிக்கமலங்குவித்தேன்குடமூக்கிற்சுடர்மறுகி னடிக்கமலங்குபயில்பண்ணைத்தில்லைநயந்தவர்க்கு முடிக்கமலங்குலவப்புனைந்தார்க்கிம்முதுபிழைக்காத் துடிக்கமலங்குமனமமர்ப்பானொருதுட்டனென்னே. |
30 |
2161 |
என்னையப்பாவலர்தூற்றுநர்தூற்றவெண்ணாதெறிந்து நன்னையப்பாவலர்சூழுங்குடந்தைநகுமுதலே யன்னையப்பாவலர்செஞ்சடைமேலென்றுரைத்தடைந்தேன் பின்னையப்பாவலர்கூட்டத்துச்சேர்த்துப்பிறக்குகவே. |
31 |
2162 |
பிறப்பாலனந்தமஞராமவற்றினும்பேணுதலி லிறப்பாலனந்தமடுப்பதுநேருமென்செய்துமுற்றார்க் குறப்பாலனந்தமகிழ்விற்றருமொண்குடந்தையுள்ளா யறப்பாலனந்தமரசேயின்பெய்தவருள்புரியே. |
32 |
2163 |
புரிந்தவரங்கம்வெதுப்புதலால்வரல்புண்ணியமோ பரிந்தவரங்கம்வணக்கிடுமுன்னம்பரிந்துவந்து விரிந்தவரங்கம்பலையருள்கும்பவிமலரென்று தெரிந்தவரங்கம்புகலவுள்ளார்க்கிதுசீர்த்தியன்றே. |
33 |
2164 |
அன்றலைவாரியெனக்கொடுபோகவழுங்குபுயான் பொன்றலைவாரியெடுத்தொழித்தார்க்கன்றிப்புன்மைபுகல் வன்றலைவாரிசனுக்கொழித்தான்கும்பவள்ளல்வெற்பி லின்றலைவாரிவரியாருறுவர்கொலென்மணமே. |
34 |
2165 |
என்னப்பனாகம்பவளமொப்பான்மின்னிருஞ்சடைமேன் மின்னப்பனாகம்பகர்குடமூக்கமர்வித்தகன்பேர் பன்னப்பனாகம்படுவிடந்தீர்ந்தோர்பனவன்மகன் மன்னப்பனாகம்பலைக்கவுய்ந்தானொர்வணிகனுமே. |
35 |
2166 |
வண்ணக்குவளைவிழியாளிவளென்றுமாழ்கிமண்ணோ ருண்ணக்குவளைமுதுகாயினீரென்றுரையளவு மெண்ணக்குவளையிலக்காக்குவீர்பயனென்குடந்தை யண்ணக்குவளையணிபெருமானையடுத்துய்ம்மினே. |
36 |
2167 |
உய்யாதபாதகனாமெனையாருணர்வார்குடந்தை மெய்யாதபாதபுகழாய்துறைசைவெளிப்பட்டுநீ யெய்யாதபாதரசம்போறலையற்றிருவென்றுநோய் செய்யாதபாதமலர்தலைச்சூட்டல்செய்யாவிடினே. |
37 |
2168 |
விடக்கந்தரத்தருமாபாகர்கும்பவிமலர்பைம்புற் றடக்கந்தரத்தருவாவுரித்தார்பொற்றடவரைவா யடக்கந்தரத்தருமம்புரிவார்நமதன்பர்வினை மடக்கந்தரத்தருமஞ்சுமிவ்வாற்றுவரல்கொடிதே. |
38 |
2169 |
வரந்தந்தவரைபெறநாவன்மேயவர்வாழ்த்துநரைப் புரந்தந்தவரையுயர்த்துங்கும்பேசர்பொருப்பிலருள் சுரந்தந்தவரைசெயவந்தயானைதொலைத்தென்னுயிர் திரந்தந்தவரைவிடுத்தெவர்க்கார்க்குமித்திண்முரசே. |
39 |
2170 |
முரசம்பலவனிதஞ்சிலைக்குங்குடமூக்கமர்வா னரசம்பலவனிகமஞ்சொற்றானெளியானரியான் பரசம்பலவனியுள்ளார்க்கரன்வெற்பிற்பங்கயத்து விரசம்பலவனிதாய்கொடுங்கூற்றுநின்மெய்ம்முற்றுமே. |
40 |