LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன்

பேரறிஞர் அண்ணா குறள் பணிகளை மனத்தில் இருத்தி, அவரது நினைவைப் போற்றுவோம்.
 
1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம் அனைத்து அரசாங்க அலுவலகங்கள் - கோர்ட் - காவல் நிலையங்கள் - பேருந்துகள் அனைத்திலும் இடம் பெற வேண்டும் என அரசாணை வெளியிட்டார் ( GOMS 1193 ).
 
*அனைவரிடத்திலும் அன்போடும் - பண்போடும் எளிமையாகப் பழகும், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த வேணுகோபால் சர்மா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா. *‘ஓவியப் பெருந்தகை’* ( ஆங்கிலத்தில் - NOBLE SOUL ) என்ற பட்டத்தை அளித்துக் கவுரவித்தார்
*தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் 1968 இல் இரண்டாம் உலத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதன் விளைவாக
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம்
ஆகிய பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கென்று ரூபாய் 3 இலட்சம் வைப்பு நிதியாக நல்கப்பட்டு, திருக்குறள் ஆய்விருக்கை அமைக்கப்பட்டது.
 
திருக்குறள் பணி குறித்து பேரறிஞர் அண்ணா
"நமது பெரும் பணி மூலமே, மக்களுக்கு, வாழ்க்கையிலே சந்தேகத்தை நீக்கவும், போக்கவும், நேர்மையை நிலைநாட்டவும் உதவும் இப்பெருநூலின் உண்மைப் பொருள் தெரிய முடியும்.
 
குறள் ஏந்திச் செல்வோம் - நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டிகளில் எல்லாம்! பண்பாடு - எது என்பதை மக்கள் அறியச் செய்வோம்!
 
அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள் உணர மட்டுமல்ல; நுகரவும் பணியாற்ற வேண்டும்.
 
புதிய பணி இது; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான் - முற்றிலும் புதிதன்று!
 
அப்பணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு - குறளின் அருமை, பெருமை பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துரைகளை எண்ணிப் பார்ப்பது முக்கியமான முதல் வேலையாகும்."
 
திராவிடநாடு கிழமை இதழ் - சனவரி 14, 1949
தொகுப்பு
சி. இராஜேந்திரன்
 வள்ளுவர் குரல் குடும்பம்
சென்னை
by Swathi   on 19 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி
அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம் அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம்
அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில் அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில்
திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம் திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம்
சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு
திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம் திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம்
சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.