LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகம்

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேராவூரணி வடகிழக்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டாணிகோட்டை வடக்கு ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளிகளின் தேர்வு செய்யப்பெற்ற தலா 25 மாணவர்களுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பெற்றது. 
 
 
இந்த இயக்கம் சார்பில் பள்ளிகளில் தேர்வு செய்யப்பெறும் 25 மாணவர்களைக் கொண்டு பகிரி குழுக்கள் உருவாக்கப்பட்டு  திருக்குறள் பயிற்சி வழங்கப்படுகிறது.   மேலும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் வகையில் தயார் செய்து மாணவர்களைத் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை பெற்றிட ஊக்கப்படுத்துகிறார்கள்.   அறம் சார்ந்த பொருள் வளமிக்க நல்லிணக்கச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தோடு பள்ளிகள் தோறும் திருக்குறள் புத்தகங்களை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
 
 
பேராவூரணி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் பயிற்றுநர்கள் தஞ்சாவூர் அ.கோபிசிங் மற்றும் ஆனந்தி சரவணன் ஆகியோர் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கி ஊக்க உரை நிகழ்த்தினார்.  
 
 
பேராவூரணி திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள்  பாவலர் மு.தங்கவேலனார், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்,  த.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
 
பொன்னாங்கண்ணிக்காடு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையிலும் நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமையிலும், பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர் காஜாமுகைதீன் தலைமையிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது.
 
 
நூல்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் இவ்வாண்டுக்குள் 1330 குறட்பாக்களையும் படித்து மனனம் செய்ய உறுதியேற்றுக் கொண்டனர்.

 

 

by hemavathi   on 10 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
தெக்கத்தி மண்ணின் படைப்பாளி  இரா.நாறும்பூநாதன்  காலமானார். தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
நிதிநிலை அறிக்கை இலச்சினையில்  ரூ  - தமிழக அரசு அதிரடி நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.