LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-9) - பேராசிரியர் அரங்க இராமலிங்கம்

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-24

நாள்: 04/08/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள் களஞ்சியம் (தொகுதி-9)
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்

வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி, பத்து தொகுதிகளாக இத்திருக்குறள் களஞ்சியம் நூலில் தொகுப்பட்டுள்ளது. 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியின் ஒன்பதாவதான இந்நூலில், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் க.ப. அறவாணன், பேராசிரியர் கு. மோகனராசு மற்றும் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் ஆகியோரது கட்டுரைகள் உட்பட 12 கட்டுரைகள் அடங்கியுள்ளது. வர்த்தமானன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).

நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் க. மாரிமுத்து

முனைவர் க. மாரிமுத்து அவர்கள் தற்போது சென்னையில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் மேலப்புஞ்சை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தம்முடைய இளங்கலைத் தமிழ்ப் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ்மொழித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, முனைவர் ஆய்வும் முடித்தவர். முதுகலைத் தமிழியல் பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் ‘ஐந்திணை இலக்கியங்களில் அணிநலன்: பதினெண்கீழ்க்கணக்கு’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றுள்ளார். 'கலித்தொகைக் கவிதைமொழி’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டத்தினை நிறைவு செய்துள்ளார். பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், பல்நோக்கு ஆய்வுக் கட்டுரைகள் எனத் தமிழுக்காகத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.