LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தெருவெல்லாம் குறள் முழக்கம் செய்த குரல் ஓய்ந்தது..திருக்குறள் திரு.எல்லப்பன் இயற்கை எய்தினார்.

தெருவெல்லாம் குறளின் குரலாக ஒலித்த திருக்குறள் கவனகர் திரு இரா. எல்லப்பன் இன்று 12/03/2022காலை 10:30 மணியளவில் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.. முன்னதாக மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்..

திருக்குறள் பரவலாக்க முயற்சியில் மாபெரும் பின்னடைவு

செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் கிராமம் இவரது சொந்த ஊர். 19 ஆண்டுகளாக இந்த பணியில் முழுமையாக, முழுநேரமும் ஈடுபட்டு வந்தார். இது வரை இவரிடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் பயிற்சி எடுத்திருக்கின்றனர். அதில் 180 க்கும் அதிகமானவர்கள் அரசு விருது பெற்றுள்ளனர்.
முற்றோதல் செய்ததில் பெரும்பாலான மாணவர்கள் 3 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள். ஏழு மாதத்தில் 1330 குறட்பாக்களும் மனனம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரில் கலந்து கொள்ள முடியாததால் 50 மாணவர்கள் தற்போது இணையம் வழியாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் அமெரிக்கா, கனடா, அபுதாபி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர்.
மிகவும் குறைந்த விழுக்காடு அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பு பயிற்சி எடுக்க வருகிறார்கள் என்பது இவரது பெரும் மனக்குறை .

தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களே 98 விழுக்காடு முற்றோதல் பயிற்சி பெறுகின்றனர் .

இவரது பார்வையில், தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்கினால் ஒரு வருடத்திற்குள்ளாகவே 1330 குறட்பாக்களும், எந்த விதமான சிரமமும் இல்லாமல் மனனம் செய்து விடலாம். பெற்றோர்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கிறது .

குறைந்த பட்சம் மாவட்டத்துக்கு 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2023க்குள் இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சியை அளித்து பரிசு பெற வைக்க வேண்டும் என்ற இலக்குடன் வள்ளுவர் குரல் குடும்பம், வலைத்தமிழ், மற்ற 5 திருக்குறள் முற்றோதல் ஆசிரியர்கள் , S2S Service To Society எல்லாம் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில் திருக்குறள் கவனகர் எல்லப்பன் (58 வயது) இன்று 12/03/2022காலை 1030 மணியளவில் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்..இது திருக்குறள் பரவலாக்க முயற்சியில் மாபெரும் பின்னடைவு.

முன்னதாக திரு இரா. எல்லப்பன் மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்..

தெருவெல்லாம் குறள் முழக்கம் செய்த குரல் ஓய்ந்தது..

இல்லை இல்லை

அவர் விதைத்த விதைகள் முளைத்தெழுந்து பலன் கிடைக்கும்
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்..

by Swathi   on 12 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.