|
|||||
தெருவெல்லாம் குறள் முழக்கம் செய்த குரல் ஓய்ந்தது..திருக்குறள் திரு.எல்லப்பன் இயற்கை எய்தினார். |
|||||
தெருவெல்லாம் குறளின் குரலாக ஒலித்த திருக்குறள் கவனகர் திரு இரா. எல்லப்பன் இன்று 12/03/2022காலை 10:30 மணியளவில் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.. முன்னதாக மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.. திருக்குறள் பரவலாக்க முயற்சியில் மாபெரும் பின்னடைவு செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் கிராமம் இவரது சொந்த ஊர். 19 ஆண்டுகளாக இந்த பணியில் முழுமையாக, முழுநேரமும் ஈடுபட்டு வந்தார். இது வரை இவரிடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் பயிற்சி எடுத்திருக்கின்றனர். அதில் 180 க்கும் அதிகமானவர்கள் அரசு விருது பெற்றுள்ளனர். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரில் கலந்து கொள்ள முடியாததால் 50 மாணவர்கள் தற்போது இணையம் வழியாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் அமெரிக்கா, கனடா, அபுதாபி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களே 98 விழுக்காடு முற்றோதல் பயிற்சி பெறுகின்றனர் . இவரது பார்வையில், தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்கினால் ஒரு வருடத்திற்குள்ளாகவே 1330 குறட்பாக்களும், எந்த விதமான சிரமமும் இல்லாமல் மனனம் செய்து விடலாம். பெற்றோர்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கிறது . குறைந்த பட்சம் மாவட்டத்துக்கு 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2023க்குள் இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சியை அளித்து பரிசு பெற வைக்க வேண்டும் என்ற இலக்குடன் வள்ளுவர் குரல் குடும்பம், வலைத்தமிழ், மற்ற 5 திருக்குறள் முற்றோதல் ஆசிரியர்கள் , S2S Service To Society எல்லாம் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் திருக்குறள் கவனகர் எல்லப்பன் (58 வயது) இன்று 12/03/2022காலை 1030 மணியளவில் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்..இது திருக்குறள் பரவலாக்க முயற்சியில் மாபெரும் பின்னடைவு. முன்னதாக திரு இரா. எல்லப்பன் மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.. தெருவெல்லாம் குறள் முழக்கம் செய்த குரல் ஓய்ந்தது.. இல்லை இல்லை அவர் விதைத்த விதைகள் முளைத்தெழுந்து பலன் கிடைக்கும் |
|||||
by Swathi on 12 Mar 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|