LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

பிராஹுவி மொழியில் திருக்குறள்: ஒரு கனவு நிறைவேறியது

பிராஹுவி மொழியில் திருக்குறள்: ஒரு கனவு நிறைவேறியது:

பிராஹுவி மொழியில் திருக்குறளை மொழிமாற்றம் செய்வது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. ஆரியமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட பாலுசிஸ்தானில், பன்முகமான படையெடுப்புகளுக்கு இடையில் பிராஹுவி மொழி பேசுவோர் வாழ்ந்த கைபர் மற்றும் போலான் கணவாய் வழியாக படையெடுத்து வருவோரின் ஆதிக்கத்தையும் மீறி, மலைப்பகுதிகளில் குடியமர்ந்த பிராஹுவிகள் தங்கள் திராவிட மொழிப் மரபுகளை பாதுகாத்து வந்திருக்கின்றனர். ஐந்து ஆண்டு கால எனது முயற்சி இப்பொழுது, பொறியாளர் முஹம்மது அஃப்ஸல் ப்ரோஹி திருக்குறளை வெற்றிகரமாக பிராஹுவி மொழியில் மொழிமாற்றம் செய்ததன் மூலமாக முழுமை அடைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்னேற்றம் மற்றும் ஒழுக்கத்துடன் நடந்த பயணம்:

முன்னதாக, இருவர் திருக்குறளை பிராஹுவி மொழியில் மொழிமாற்றம் செய்ய முன்வந்தனர். ஆனால், ஒருவர் கல்விச் சூழ்நிலைகளால் மேலும் ஒருவர் தொழில் காரணமாக முன்வந்த முயற்சியிலிருந்து பின் விலகினர். ஆனால், பொறியாளர் முஹம்மது அஃப்ஸல் ப்ரோஹி-யின் முதிர்ச்சியும், திருக்குறளின் ஆழ்ந்த ஞானத்தை அவர் கோடிட்டு உணர்ந்திரந்ததாலும், அயராத உழைப்பால், வெறும் பத்து மாதங்களில் மொழிமாற்றம் செய்வதை நிறைவு செய்திருக்கிறார். இவரது வேகமும், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு சாதனை என்றால் மிகையாகாது.

திருக்குறள் மொழிமாற்றத்தில் முஹம்மது அஃப்ஸல் ப்ரோஹியின் பயணம்:

2024 தொடக்கத்தில், அவர் முதலில் பத்துநாட்கள் ஆங்கிலத்தில் திருக்குறள் பற்றிய நூல்களை படித்து ஆய்வு செய்தார். பின்னர், 2024 ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில், அவர் மொழிமாற்றப் பணியை ஆரம்பித்தார். முதல் கட்டமாக, தினமும் ஐந்து குறள்களை மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்தார். துவக்கத்தில் தினமும் தினமும் ஐந்து குறள்களை மொழிமாற்றம் செய்ய மூன்று முதல் ஐந்து மணி காலம் தேவைப்பட்டது.

மொழிமாற்றம் செய்ய இவர் பயன் படுத்திக் கால அட்டவணை (ஜனவரி - மார்ச் 2024) பின் வருமாறு:
📌 காலை 7:00 – 10:00
📌 மதியம் 2:00 – 5:00
📌 இரவு 7:00 – 10:00

இந்த ஒழுங்குமுறையுடன், அவர் தினமும் 15-20 குறள்களை மொழிமாற்றம் செய்யத் தொடங்கினார். முதல் தொகுதியான அறத்துப்பாலை, ரமளான் மாதம் ஆரம்பிப்பதற்குள் (மார்ச் 2024) முடிக்க திட்டமிட்டார். தமிழில் திருக்குறள் ஒலிப்பதிவுகளை கேட்டுப் புரிந்துகொண்டு, பிராஹுவி மொழியில் (அரபு எழுத்து வடிவில்) மொழி திரித்தலை எழுதினார். மார்ச் மாதத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போதிலும், தனது திட்டமிட்ட நேரத்திற்குள் முதல் தொகுதியை நிறைவு செய்தார்.

ஆரம்பத்தில், அவர் ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாக வெளியிடத் திட்டமிட்டார். ஆனால், பேராசிரியர் முனைவர் சொசன் ப்ரோஹி-யின் ஆலோசனைப்படி, எல்லா மூன்று தொகுதிகளையும் ஒரே நேரத்தில் மொழிமாற்றம் செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்தார். அதன் அடிப்படையில், மே 11, 2024 அன்று மறுபடியும் மொழிமாற்றத்தைத் தொடர்ந்தார்.

வேகமான மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள்:

தன்னுடைய மொழிமாற்றம் செய்யும் பணியின் வேகத்தை அதிகரிக்க அவர் புதிய கால அட்டவணையை நடைமுறைப் படுத்தினார்:

📌 காலை 7:00 – பிற்பகல் 2:00 (முதல் அமர்வு)
📌 பிற்பகல் 3:00 – மாலை 6:00 (இரண்டாம் அமர்வு)
📌 மாலை 7:30 – இரவு 11:00 (மூன்றாம் அமர்வு)

இந்த கடுமையான உழைப்பினால், அவர் அனைத்து 1330 குறள்களையும் முதன்முறையாக 2024 ஜூன் 26ஆம் தேதிக்குள் மொழிமாற்றம் செய்து விட்டார். இந்தப் பயணம் மிக விரைவாக நடந்ததால், அவர் இத்தனை குறள்களை குறைந்த காலத்திற்குள் மொழிமாற்றம் செய்திருப்பதை முதலில் நான் நம்பவில்லை.

சவால்கள் மற்றும் மேம்படுத்தல்கள்:

அவரது மொழிமாற்றம் பணிக்கிடையில், பொறியாளர் முஹம்மது அஃப்ஸல் ப்ரோஹி சமூக-அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டு மரபுகளையும், பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் பாதுகாக்க, ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதற்காக 24 ஆதரவாளர்களுடன் பல்வேறு பகுதிகளில் பயணித்தார். இது அவரது திருத்தப் பணியை தாமதித்தது. மேலும், கனமழை காலத்தில் கடுமையான மின் துண்டிப்புகளும் ஏற்பட்டன.

எனினும், 2024 ஆகஸ்ட் 31க்குள், அவர் பிராஹுவி மொழிமாற்றத்தை முழுமையாக திருத்தி, தேவையான இடங்களில் வாசிப்பவர்கள் நலன் கருதி புதிய கூடுதலான தகவல்களையும் சேர்த்தார்.

2024 செப்டம்பர் 2ஆம் தேதி முதல், அவர் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கத் தொடங்கினார்:
✅ தமிழ் மூலக்குறள்கள்
✅ பிராஹுவி மொழி திரிப்பு (அரபு எழுத்து வடிவில்)
✅ தலைப்புகள், முன்னுரை, மற்றும் விளக்கக் குறிப்புகள்

செப்டம்பர் இறுதிக்குள், மொழிமாற்றப் பணிகள் நிறைவு பெற்றது. தற்போது, இவரது மொழிமாற்றம் இரண்டு பிராஹுவி மொழி அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம், நான் அவருக்கு உரோமானிய எழுத்துக்களிலும் திரித்தலும், (Transliteration) ஒவ்வொரு குறளுக்கும் சுருக்கமான விளக்கக் குறிப்புகளும் சேர்க்க ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மறு தலைமுறைக்காக ஒரு கலைவாழ்வு:

இத்தகைய கனவு நனவாகி வருவது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. பொறியாளர் முஹம்மது அஃப்ஸல் ப்ரோஹியின் இடைவிடாத உழைப்பு, பிராஹுவி இலக்கியத்துக்கும், திருக்குறளின் உலகளாவிய பெருமைக்கும் ஒரு பெரும் பங்காக விளங்கும். இது திராவிட மூலக் கொள்கையான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் சமத்துவக் கோட்பாட்டை நிலைநாட்டும்.

இவரது மொழிமாற்றப் பணி பாக்கிஸ்தானில் உள்ள பாலுசிஸ்தான் மக்களுக்கின் பயன்பாட்டிற்காகவும், உலகளாவிய பிராஹுவி மொழி பேசும் புலம்பெயர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காகவும் வெளியிடப்பட்டு, பலரும் பயனடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

-பேரருளாளர் முனைவர் J இரவிக்குமார் ஸ்ஃறீபன் G.,
நிறுவனர்,
திராவிட மறுமலர்ச்சி மய்யம்,
மும்பை, இந்தியா

#ThirukkuralInBrahui #BrahuiLanguage #Thirukkural #Equality #CulturalRevival #LinguisticPreservation #BrahuiLiterature #Brahui

by Swathi   on 18 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.