திருக்குறள் ஆத்திச்சூடி மூதுரை கற்பிக்கும் நீதிபோதனை வகுப்புகள் பள்ளிகளில் அவசியம் வேண்டும் த.ஸ்டாலின் குணசேகரன்
மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஈரோட்டில் ஏ.ஜி.ஆர் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிகளில் வாரத்தில் ஒரு வகுப்போ இரண்டு வகுப்புகளோ நீதி போதனைகள் கற்றுக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும். திருக்குறள்,ஆத்திச்சூடி மூதுரை,கொன்றை வேந்தன் என மனித மதிப்புகளை பேசும் நீதி நூல்கள் அவ்வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன என்று கூறினார்.
மேலும் திருக்குறள் பற்றி பேசிய அவர் திருக்குறளின் பொதுமைப் பண்பே அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம். திருக்குறள் மன்னரைப் பாடாமல் மனிதர்களைப் பாடிய இலக்கியம். எந்த சார்பும் இல்லாத மனித குலத்திற்கான இலக்கியம். ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து லண்டனில் வெளியிட்டுள்ளார். எத்தனையோ மொழியினருக்கு கிடைக்காத ஞானப்பெட்டகம் போன்றதோர் நூல் தமிழருக்கு கிடைத்துள்ளது, என்று கூறினார்.
கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
|