LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் திலகம் பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி

திருக்குறள் திலகம் பட்டமளிப்பு விழா - திரு. க. கோ. பழனி  வழங்கினார் 

திரு. க. கோ. பழனி (வயது 69)
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்துறை பிரிவில் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

திருவள்ளுவர் கல்வி மன்றம்,
திருக்குறள் முற்றோதல் பயிற்றகம் ,
என்ற அமைப்பை தையூர், கேளம்பாக்கம்,சென்னை பகுதியில் நிறுவித் திருக்குறள் தொண்டாற்றி வருகிறார் .இவரோடு இவரது குடும்பமும் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிறது.

இந்த ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வுக்கு பதிவு செய்துள்ளார்

இவர்களுக்கு சான்றிதழ் வழங்கி திருக்குறள் திலகம் என்ற பட்டமும் வழங்கி , அவர்களை மகிழுந்துமேல் பகுதியில் இருக்கை அமைத்து ஊர்வலமாக வரச் செய்தார்

ஊர்வலத்தின் நநிறைவில் கூட்டம் ஒன்று அமைத்து அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும், திருவள்ளுவர் சிலையும் தலா 1330 ரூபாயும் வழங்கப்பட்டது .

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக இந்த விழாவில் நானும் என் துணைநலம் மலர்க்கொடியும் கலந்து கொண்டோம்

மனனம் செய்த மாணவர்களுக்கு துணைவியார் எழுதிய நிழல் காட்டும் நிஜங்களின் 26 கதைகள் அடங்கிய சிறப்பு வெளியிட்டை அன்பளிப்பாக வழங்கினோம், திருக்குறள் மன்றத்துக்கு திருக்குறள் உவமை நயம் என்ற நூலை வழங்கி மகிழ்ந்தோம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டஅனைவருக்கும் சுண்டல் ,கடலை மிட்டாய் ,வாழைப்பழம் கொய்யாப்பழம் வழங்கப்பட்டது.

புதிய மாணவர்களும் பெற்றோர்களும் அந்த பகுதியில் வாழும் பெரியோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திரு பழனி- திருமதி வளர்மதி பழனி
அமைத்த நிகழ்ச்சியும் அவர்களது விருந்தோம்பலும் நிறைவாக இருந்தது

இவரது முழக்கம்...

மாணவச் செல்வங்களே
தமிழ்த் தாய் அருளிய திருவள்ளுவரின் திருக்குறளை
கற்று மனதில் ஒழுங்கு , ஒழுக்கம் , உயர்வு , நினைவாற்றல் , ஆளுமை திறன், இவற்றை வளர்க்க ஏற்ற வயது மாணவர் பருவமே!

உணர்ந்து செயல் படு மனிதா!
உயர்ந்து செல் மனிதா!
உலகை வென்று விடு மனிதா!
அன்புடன் வாழ்ந்து விடு மனிதா!

கல்வி மன்றம் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் முடிந்து 10 ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10&12 வகுப்பில் முதல் மாணவர்களாக வந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி , பாராட்டி பரிசும் வழங்கி வருகிறார் .


10 குழந்தைகள் 1330 குறள் மனனம் செய்து உள்ளனர் , 5 குழந்தைகள் தமிழ்நாடு அரசு விருது வாங்கி உள்ளனர்

மாணவச் செல்வங்கள் அனைவரையும் கல்வியில் மேம்படுத்தியும் திருக்குறள் கற்க வைத்தும் உடல்நலத்தோடு கல்வியில் சிறந்து விளங்க தொடர் முயற்சி செய்து வருகிறார். மாணவச் செல்வங்கள் உடல்நல செய்திகளோடு திருக்குறள் கற்றும் , தையூர் கேளம்பாக்கம் பள்ளிகளில் பயிலும் மாணவ செல்வங்களுக்கு புரிதல் ஏற்பட்டு முன்னேற்றம் சிறப்பாக உள்ளது .

இன்னும் சிறப்பாக உயர்ந்து ஒழுக்கத்துடன் மாணவச் செல்வங்கள் உயர்ந்து வர இந்த கல்வி ஆண்டில் (2022-2023 )திருக்குறளில் 133 அதிகாரங்கள்
குறிக்கும் வகையில் 133 மாணவ செல்வங்கள் ஜூன் 13ம் தேதி முதல் தேர்வு செய்து அவர்களுக்கு திருக்குறள் கற்க வைத்து , தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் திருக்குறள் முற்றோதல் திறனாய்வு தேர்வில் , அரசு சான்றிதழ் விருதும் பரிசும் கிடைக்க முயற்சித்து வருகிறார்

விருப்பமுள்ள பெற்றோர்கள் திரு க. கோ. பழனி கைபேசியில் 98944 59052 தொடர்பு கொள்ளலாம் .

சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

by Swathi   on 26 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.