திருக்குறள் தனியொரு பாடமாகிறது ,சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு
உலக மக்கள் பலரையும் கவர்ந்த கருத்துக்களைக் கொண்டதமிழ்ப் படைப்பு திருக்குறள்.தமிழர் திருக்குறள் அறிவு பெறுவது அவசியமாகும் என்பது தமிழ்ச் சான்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு பாராட்டிற்குரியதாக அமைந்துள்ளது.இனி வரும் கல்வியாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம்,மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் 'தொழில் தர்மத்திற்கான திருக்குறள்' என்ற பெயரில் தனியொரு பாடமாகவே அறிமுகமாகிறது திருக்குறள்.இதனை அறிவித்திருக்கிறார் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி அவர்கள்.
இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திருக்குறளின் கருத்துகள்,அற முறைகளை அறிவது உறுதி.இவ்வறிவிப்பினை வெளியிட்டு திருக்குறளின் முக்கியத்துவத்தினை அறிவுறுத்தி இருக்கிறது சென்னைப் பல்கலைகழகம்.தமிழ்நாட்டின் மற்ற கல்வி அமைப்புகளுக்கும் மற்றும் நிர்வாகங்களுக்கும் ஒரு முன்மாதிரியைத் தந்துள்ளது சென்னைப் பல்கலைக்கழகம் என்றும் கூறலாம்.
பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்பட மற்றும் சீர்திருத்தங்களுக்காக ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் துணைவேந்தர் கௌரி அவர்களால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
|