LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

திருமந்திரச்சுருக்கு

12.1:
நாவலர் மறைநா லொன்று நலந்திகழ் மறையொன் றோரா
தாவலிப் பலைக்கு மோகத் தழுந்திநின் றலமர் கின்றீர்
தூவலம் புரியா மொன்றிற் றுவக்கமாம் வண்ண மொன்றாற்
காவலென் றகரத் தவ்வாய்க் கருத்துறக் காண்மி னீரே.

12.2:
இளக்கமின் மயக்கந் தன்னா லெனக்கியா னுரிய னென்னுங்
களக்கருத் தொன்றே கொண்டு கடுநர கடைந்து நின்றீர்
விளக்குமவ் வெழுத்தி னாலாம் வேற்றுமை யேற்றி வாங்கித்
துளக்கமி லடிமை பூண்டு தூயராய் வாழ்மி னீரே.

12.3:
அப்பொரு ளிகந்து மற்று மழித்தழிந் தெழுவார் தாளி
லிப்பொரு ளிகந்த வன்பா லிரங்கினீர் வணங்கி வீழ்ந்தீ
ருப்பொரு ளுள்ளி மற்றோ ருயிர்தனக் குரிமை மாற்றி
யெப்பொருட் பயனு மீதென் றெண்ணினி ரெழுமி னீரே.

12.4:
என்றுமோ ரேத மின்றி யிரவியு மொளியும் போல
வொன்றிநின் றுலக ளிக்கு முகமிகந் தடிமை வைத்தீ
ரொன்றுமூன் றெழுத்தா யொன்று மொன்றிலொன் றுடைய முன்னே
யொன்றிய விரண்டை யுள்ளி யுளரென வுய்ம்மி னீரே.

12.5:
தத்துவ மறுநான் கோடு தனியிறை யன்றி நின்ற
சித்தினை யுணரா தென்றுந் திரடொகை யாகி நின்றீர்
மத்தனைத் தனிவி டாதே மையிலா விளக்க மாக்கி
யுத்தம னடிமை யான வுயிர்நிலை யுணர்மி னீரே.

12.6:
தனதிவை யனைத்து மாகத் தானிறை யாகு மாய
னுனதென முணர்த்தி தாரா துமக்குநீ ருரிமை யுற்றீ
ரெனதிவை யனைத்தும் யானே யிறையெனு மிரண்டுந் தீர
மநவெனு மிரண்டின் மாறா வல்வினை மாற்று வீரே.

12.7:
அழிவிலா வுயிர்கட் கெல்லா மருக்கனா யழியா வீசன்
வழியலா வழிவி லக்கு மதியெழ மாய மூர்த்தி
வழுவிலா திவைய னைத்தும் வயிற்றில் வைத் துமிழ்ந்த மாலை
நழுவிலா நார வாக்கி னாடிநீர் நணுகு வீரே.

12.8:
வயனமொன் றறிந்து ரைப்பார் வங்கழல் வணங்கி வெள்கி
நயனமுள் ளின்றி நாளு நள்ளிரு ணண்ணி நின்றீ
ரயனமிவ் வனைத்துக் குந்தா னவைதனக் கயன மென்னப்
பயனுமாய்ப் பதியு மான பரமனைப் பணிமி னீரே.

12.9:
உயர்ந்தவ ருணர்ந்த வாற்றா லுவந்தகுற் றேவ லெல்லா
மயர்ந்துநீ ரைம்பு லன்கட் கடிமைபூண் டலமர் கின்றீர்
பயந்திவை யனைத்து மேந்தும் பரமனார் நாம மொன்றில்
வியந்தபே ரடிமை தோற்றும் வேற்றுமை மேவு வீரே.

12.10:
எண்டிசை பரவுஞ் சீரோ ரெங்களுக் கீந்த வெட்டி
லுண்டவா றுரைப்பார் போல வொன்பது பொருளு ரைத்தோ
மண்டுநான் மறையோர் காக்கு மாநிதி யிவைய னைத்துங்
கண்டவர் விள்ளார் விள்ளக் கருதுவார் காண்கி லாரே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: நாவலர், இளக்கமின், அப்பொருள், என்றும்,
தத்துவம், தனதிவை, அழிவிலா, வயனம், உயர்ந்தவர்,
எண்டிசை, இன்னமுது.-

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.