|
||||||||
திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம் |
||||||||
திருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்: "திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்க இருவழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக் கேடில் முதல்வன் விளைக்கும் தவம் அறம் மேற்றுணை யாமே " திளைக்கும் வினைக்கடல் என்றால் என்ன? ஒவ்வொருவரும் வினைக் கடலாகத்தான் இருக்கிறோம். இதுவரை செய்த செயலின் தொகுப்பே மனிதன். தீயவினைப் பதிவுகள் அவ்வப்போது வாழ்வில் துன்பங்களை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே, இந்தக் கடலைக் கடப்பதற்காகவே வாழ்க்கை என்ற தோணியில் போய்க் கொண்டுள்ளோம். ஆனால் அதைக் கடக்க முடியாமல் சோர்வுறுகிறோம். கிளைக்கும் என்றால் இவனுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்கும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். நமது சந்ததியினரும் கூட நன்மையே பெற வேண்டுமானால் தவமும், அறமும் வேண்டும். "தவம்" என்றால் இறைநிலை உணருவதற்காகச் செய்யக் கூடிய அகத்தவப் பயிற்சி. அதாவது உளப்பயிற்சி (Meditation). அறம் என்றால் முயற்சியையும், செயல்களையும் தனக்கும் பிறர்க்கும் எக்காலத்திற்கும் துன்பமின்றி நலமே விளைப்பனவாக மாற்றும் பயிற்சி. ஆகவே "தவம்", "அறம்" என்ற இரண்டு வழிகள் தான் மனிதனை உய்விப்பதற்கான வழி என்பது திருமூலர் வாக்கு. |
||||||||
by Swathi on 20 Jan 2014 0 Comments | ||||||||
Tags: Thirumular Thirumular Kavi Magarishiyi திருமூலர் திருமூலர் கவி மகரிஷி | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|