LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல்

 

பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே 
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே 
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே 
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே 
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே 
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே 
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே 
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635 
ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே 
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே 
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே 
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே 
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே 
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே 
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636 
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே 
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே 
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே 
ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே 
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே 
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே 
இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே 
என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637 
என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே 
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே 
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே 
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே 
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே 
மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே 
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே 
என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638 
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே 
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே 
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே 
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே 
பெண்ணலி ஆணென நாமௌ வந்த பிணக்கறு மாகாதே 
பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே 
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே 
என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639 
பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே 
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே 
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே 
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே 
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே 
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே 
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே 
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640 
சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே 
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே 
பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே 
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே 
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே 
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே 
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே 
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641 
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே 
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே 
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே 
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே 
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே 
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே 
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே 
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642 

 

பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

 

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே 

காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே 

மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே 

மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே 

பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே 

பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே 

விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே 

மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635 

 

ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே 

கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே 

காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே 

நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே 

நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே 

என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே 

ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636 

 

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே 

பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே 

அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே 

ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே 

செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே 

சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே 

இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே 

என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637 

 

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே 

எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே 

நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே 

நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே 

மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே 

மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே 

இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே 

என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638 

 

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே 

வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே 

கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே 

காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே 

பெண்ணலி ஆணென நாமௌ வந்த பிணக்கறு மாகாதே 

பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே 

எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே 

என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639 

 

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே 

பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே 

மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே 

வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே 

தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே 

தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே 

இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே 

என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640 

 

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே 

துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே 

பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே 

பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே 

வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே 

விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே 

எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே 

இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641 

 

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே 

சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே 

அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே 

ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே 

செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே 

சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே 

எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே 

ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.