LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல்

 

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே 
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் 
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற 
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275 
எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய 
பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் 
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த 
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276 
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் 
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான் 
மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் 
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277 
பண்பட்ட தில்லைப் பதிfக்காசைப் பரவாதே 
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் 
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் 
புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278 
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் 
ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே 
நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் 
வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279 
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் 
சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி 
உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே 
புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ. 280 
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து 
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் 
அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற 
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281 
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே 
குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி 
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் 
கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 282 
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் 
என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் 
கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் 
பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283 
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் 
சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் 
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி 
போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284 
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் 
கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் 
ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே 
போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285 
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் 
கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன் 
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் 
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286 
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி 
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் 
நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் 
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287 
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் 
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் 
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா 
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288 
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் 
செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் 
பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் 
பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289 
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு 
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் 
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட 
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290 
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் 
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே 
என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் 
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291 
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே 
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் 
தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் 
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292 
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் 
பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் 
முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் 
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293 
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் 
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் 
கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் 
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294 

 

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே 

துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் 

அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275 

 

எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய 

பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் 

அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த 

பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276 

 

நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் 

தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான் 

மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் 

வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277 

 

பண்பட்ட தில்லைப் பதிfக்காசைப் பரவாதே 

எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் 

விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் 

புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278 

 

தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் 

ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே 

நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் 

வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279 

 

எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் 

சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி 

உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே 

புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ. 280 

 

வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து 

இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் 

அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281 

 

நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே 

குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி 

முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் 

கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 282 

 

பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் 

என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் 

கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் 

பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283 

 

பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் 

சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் 

காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி 

போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284 

 

பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் 

கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் 

ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே 

போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285 

 

வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் 

கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன் 

ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் 

போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286 

 

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி 

நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் 

நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் 

பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287 

 

படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் 

கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் 

தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா 

நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288 

 

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் 

செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் 

பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் 

பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289 

 

திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு 

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் 

தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட 

புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290 

 

முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் 

பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே 

என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் 

பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291 

 

சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே 

ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் 

தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் 

பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292 

 

அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் 

பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் 

முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் 

புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293 

 

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் 

தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் 

கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் 

பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.