LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்

 

முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி 
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் 
சக்தியும் சோமியும் பார்மகளும் 
நாமகளோடுபல்லாண்டிசைமின் 
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் 
கங்கையும் வந்து கவரிகொண்மின் 
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி 
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195 
பூவியல் வார்சடை எம்பிராற்குப் 
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் 
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் 
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் 
கூவுமின் தொண்டர் புறநிலாமே 
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் 
தேவியுந் தானும்வந்தெம்மையாளச் 
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196 
சுந்தர நீறணந் தும்மெழுகித் 
தூயபொன்சிந்தி நிதிநிரப்பி 
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் 
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் 
அந்தார் கோன்அயன் தன்பெருமான் 
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை 
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் 
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197 
காசணி மின்கள் உலக்கையெல்லாம் 
காம்பணி மின்கள் கறையுரலை 
நேசமுடைய அடியவர்கள் 
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் 
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் 
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் 
பாசவினையைப் பறிந்துநின்று 
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198 
அறுகெடுப்பார் அயனும்அரியும் 
அன்றிமற்றிந்திர னோடமரர் 
நறுமுது தேவர்கணங்கெளெல்லாம் 
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் 
செறிவுடை மும்மதில் எய்தவில்லி 
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி 
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் 
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199 
உலக்கை பலஒச்சு வார்பெரியர் 
உலகமெலாம்உரல் போதாதென்றே 
கலக்க அடியவர் வந்துநின்றார் 
காண உலகங்கள் போதாதென்றே 
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு 
நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த 
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து 
பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200 
சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத் 
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப 
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப 
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் 
பாடக மெல்லடி யார்க்கு மங்கை 
பங்கினன் எங்கள் பராபரனுக்கு 
ஆடக மாமலை அன்னகோவுக் 
காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201 
வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் 
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் 
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் 
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி 
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி 
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை 
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி 
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 
வையகம் எல்லாம் உரலதாக 
மாமேரு என்னும் உலக்கை நாட்டி 
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி 
மேதரு தென்னன் பெருந்துறையான் 
செய்ய திருவடி பாடிப்பாடிச் 
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி 
ஐயன் அணிதில்லை வாணனுக்கே 
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203 
முத்தணி கொங்கைகள் ஆடஆட 
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் 
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் 
செங்கயற் கண்பனி ஆடஆடப் 
பித்தெம் பிரானொடும் ஆடஆடப் 
பிறவி பிறரொடும் ஆடஆட 
அத்தன் கருணையொ டாடஆட 
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204 
மாடு நகைவாள் நிலாவெறிப்ப 
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் 
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் 
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் 
தேடுமின் எம்பெருமானைத்தேடி 
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி 
ஆடுமின் அம்பலத் தாடினானுக் 
காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205 
மையமர் கண்டனை வானநாடர் 
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை 
ஐயனை ஐயர்பிரானைநம்மை 
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் 
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் 
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் 
பையர வல்குல் மடந்தைநல்லீர் 
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206 
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் 
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் 
என்னுடை ஆரமுதெங்களப்பன் 
எம்பெருமான் இம வான்மகட்குத் 
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் 
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் 
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் 
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207 
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் 
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் 
செங்கனி வாயிதழுந்துடிப்பச் 
சேயிழை யீர் சிவலோகம் பாடிக் 
கங்கை இரைப்ப அராஇரைக்குங் 
கற்றைச் சடைமுடி யான்கழற்கே 
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் 
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208 
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை 
நாடற் கரிய நலத்தை நந்தாத் 
தேனைப் பழச்சுவை ஆயினானைச் 
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல 
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட 
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் 
பானல் தடங்கண் மடந்தைநல்லீர் 
பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209 
ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ 
டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் 
தேவர் கனாவிலுங் கண்டறியாச் 
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் 
சேவகம் ஏந்திய வெல்கொடியான் 
சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் 
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் 
செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210 
தேனக மாமலர்க் கொன்றைபாடிச் 
சிவபுரம் பாடித் திருச்சடைமேன் 
வானக மாமதிப் பிள்ளைபாடி 
மால்விடை பாடி வலக்கையேந்தும் 
ஊனக மாமழுச் சூலம்பாடி 
உம்பரும் இம்பரும் உய்யஅன்று 
போனக மாகநஞ் சுண்டல்பாடிப் 
பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211 
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி 
அருக்கன் எயிறு பறித்தல்பாடி 
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் 
காலனைக்காலால் உதைத்தல்பாடி 
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி 
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட 
நயந்தனைப் பாடிநின் றாடியாடி 
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212 
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி 
மத்தமும்பாடி மதியம்பாடிச் 
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் 
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் 
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் 
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் 
இட்டுநின் றாடும் அரவம்பாடி 
ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213 
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு 
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் 
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத் 
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் 
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் 
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு 
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு 
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 

 

முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி 

முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் 

சக்தியும் சோமியும் பார்மகளும் 

நாமகளோடுபல்லாண்டிசைமின் 

சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் 

கங்கையும் வந்து கவரிகொண்மின் 

அத்தன் ஐயாறன்அம்மானைபாடி 

ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195 

 

பூவியல் வார்சடை எம்பிராற்குப் 

பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் 

மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் 

வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் 

கூவுமின் தொண்டர் புறநிலாமே 

குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் 

தேவியுந் தானும்வந்தெம்மையாளச் 

செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196 

 

சுந்தர நீறணந் தும்மெழுகித் 

தூயபொன்சிந்தி நிதிநிரப்பி 

இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் 

எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் 

அந்தார் கோன்அயன் தன்பெருமான் 

ஆழியான் நாதன்நல் வேலன்தாதை 

எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் 

கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197 

 

காசணி மின்கள் உலக்கையெல்லாம் 

காம்பணி மின்கள் கறையுரலை 

நேசமுடைய அடியவர்கள் 

நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் 

தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் 

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் 

பாசவினையைப் பறிந்துநின்று 

பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198 

 

அறுகெடுப்பார் அயனும்அரியும் 

அன்றிமற்றிந்திர னோடமரர் 

நறுமுது தேவர்கணங்கெளெல்லாம் 

நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் 

செறிவுடை மும்மதில் எய்தவில்லி 

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி 

முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் 

காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199 

 

உலக்கை பலஒச்சு வார்பெரியர் 

உலகமெலாம்உரல் போதாதென்றே 

கலக்க அடியவர் வந்துநின்றார் 

காண உலகங்கள் போதாதென்றே 

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு 

நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த 

மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து 

பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200 

 

சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத் 

தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப 

நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப 

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் 

பாடக மெல்லடி யார்க்கு மங்கை 

பங்கினன் எங்கள் பராபரனுக்கு 

ஆடக மாமலை அன்னகோவுக் 

காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201 

 

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் 

வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் 

தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் 

சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி 

நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி 

நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை 

ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி 

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 

 

வையகம் எல்லாம் உரலதாக 

மாமேரு என்னும் உலக்கை நாட்டி 

மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி 

மேதரு தென்னன் பெருந்துறையான் 

செய்ய திருவடி பாடிப்பாடிச் 

செம்பொன் உலக்கை வலக்கைபற்றி 

ஐயன் அணிதில்லை வாணனுக்கே 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203 

 

முத்தணி கொங்கைகள் ஆடஆட 

மொய்குழல் வண்டினம் ஆடஆடச் 

சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் 

செங்கயற் கண்பனி ஆடஆடப் 

பித்தெம் பிரானொடும் ஆடஆடப் 

பிறவி பிறரொடும் ஆடஆட 

அத்தன் கருணையொ டாடஆட 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204 

 

மாடு நகைவாள் நிலாவெறிப்ப 

வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் 

பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் 

பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் 

தேடுமின் எம்பெருமானைத்தேடி 

சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி 

ஆடுமின் அம்பலத் தாடினானுக் 

காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205 

 

மையமர் கண்டனை வானநாடர் 

மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை 

ஐயனை ஐயர்பிரானைநம்மை 

அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் 

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் 

போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் 

பையர வல்குல் மடந்தைநல்லீர் 

பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206 

 

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் 

வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் 

என்னுடை ஆரமுதெங்களப்பன் 

எம்பெருமான் இம வான்மகட்குத் 

தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் 

தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் 

பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் 

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207 

 

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் 

தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் 

செங்கனி வாயிதழுந்துடிப்பச் 

சேயிழை யீர் சிவலோகம் பாடிக் 

கங்கை இரைப்ப அராஇரைக்குங் 

கற்றைச் சடைமுடி யான்கழற்கே 

பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் 

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208 

 

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை 

நாடற் கரிய நலத்தை நந்தாத் 

தேனைப் பழச்சுவை ஆயினானைச் 

சித்தம் புகுந்துதித் திக்கவல்ல 

கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட 

கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் 

பானல் தடங்கண் மடந்தைநல்லீர் 

பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209 

 

ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ 

டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் 

தேவர் கனாவிலுங் கண்டறியாச் 

செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் 

சேவகம் ஏந்திய வெல்கொடியான் 

சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் 

சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் 

செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210 

 

தேனக மாமலர்க் கொன்றைபாடிச் 

சிவபுரம் பாடித் திருச்சடைமேன் 

வானக மாமதிப் பிள்ளைபாடி 

மால்விடை பாடி வலக்கையேந்தும் 

ஊனக மாமழுச் சூலம்பாடி 

உம்பரும் இம்பரும் உய்யஅன்று 

போனக மாகநஞ் சுண்டல்பாடிப் 

பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211 

 

அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி 

அருக்கன் எயிறு பறித்தல்பாடி 

கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் 

காலனைக்காலால் உதைத்தல்பாடி 

இயைந்தன முப்புரம் எய்தல் பாடி 

ஏழை அடியோமை ஆண்டுகொண்ட 

நயந்தனைப் பாடிநின் றாடியாடி 

நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212 

 

வட்டமலர்க்கொன்றை மாலைபாடி 

மத்தமும்பாடி மதியம்பாடிச் 

சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் 

சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் 

கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் 

கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் 

இட்டுநின் றாடும் அரவம்பாடி 

ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213 

 

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு 

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் 

சோதிய மாய் இருள் ஆயினார்க்குத் 

துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் 

பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் 

பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு 

ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.