LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

திருத்தெள்ளேணம்

 

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை 
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் 
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் 
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235 
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் 
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை 
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் 
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236 
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் 
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை 
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம் 
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 237 
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே 
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி 
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து 
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 238 
அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம் 
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் 
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த 
திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 239 
அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல் 
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் 
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் 
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 240 
ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன் 
வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான் 
பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே 
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 241 
கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் 
அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் 
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத் 
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242 
கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் 
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி 
மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் 
தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243 
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் 
புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி 
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் 
சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244 
கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே 
அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல் 
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய 
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 245 
முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட 
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு 
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி 
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 246 
பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் 
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட 
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் 
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247 
மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே 
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் 
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால் 
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 248 
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு 
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை 
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம் 
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249 
புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும் 
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த 
அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள் 
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250 
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் 
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் 
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் 
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251 
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் 
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு 
ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய் 
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 252 
விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து 
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் 
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் 
தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253 
குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள் 
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் 
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254 

 

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை 

உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் 

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் 

திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235 

 

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் 

கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை 

அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் 

திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236 

 

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் 

தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை 

உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம் 

சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 237 

 

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே 

பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி 

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து 

சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 238 

 

அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம் 

உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் 

கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த 

திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 239 

 

அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல் 

வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் 

உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் 

திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 240 

 

ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன் 

வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான் 

பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே 

தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 241 

 

கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் 

அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் 

மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத் 

திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242 

 

கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் 

பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி 

மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் 

தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243 

 

கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் 

புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி 

நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் 

சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244 

 

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே 

அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல் 

மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய 

செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 245 

 

முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட 

அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு 

பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி 

தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 246 

 

பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் 

ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட 

நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் 

சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247 

 

மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே 

நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் 

பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால் 

சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 248 

 

உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு 

பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை 

மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம் 

திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249 

 

புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும் 

பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த 

அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள் 

சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250 

 

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் 

சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் 

கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் 

செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251 

 

வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் 

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு 

ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய் 

நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 252 

 

விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து 

மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் 

கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் 

தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253 

 

குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள் 

நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் 

அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.