LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருவண்ணாமலை தீபத்திருவிழா- 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்!

திருவண்ணாமலை கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 2650 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த நிலையில் தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து மூன்று நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி, துர்க்கையம்மன் உற்சவம்  நடக்கிறது.  சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து, 11-ந் தேதி இரவு 8 மணியளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பவனி வருகிறார். அதைத்தொடர்ந்து,  12-ந் தேதி நடைபெறும் பிடாரி அம்மன் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் பவனியும், 13-ந் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் நடக்கிறது.

 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:

கார்த்திகை தீபத்திருவிழாவை தரிசிக்க 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 

மேலும், குறைந்த தூரம் செல்லும் வகையில் 500 பஸ்கள் இயக்கப்படும். 16 இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகருக்கு வர வசதியாக 60 இலவச பஸ்கள் இயக்கப்படும். 

நகரையொட்டி 77 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறோம்.  இதுதவிர 14 சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் வெளியிட உள்ளது. பரணி தீப தரிசனத்துக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீப தரிசனத்துக்கு 10 ஆயிரம் பக்தர்களும் இட வசதி அடிப்படையில் கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது கோயிலுக்குள் செல்போன் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கோர்ட் வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்றும் மலைமீது சென்று நெய் காணிக்கை செலுத்த 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.