LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

திருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீப கொப்பரை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தூய செம்பு உலோகத்திலான தீப கொப்பரை சீரமைக்கும் பணி கடந்த 11ம் தேதி தொடங்கியது. தற்போது, தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது. 

வண்ணம் தீட்டப்பட்டு அதில் தீப ஒளியில் அர்த்தநாரீஸ்வரரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில்  தீப கொப்பரைக்கு பூஜை செய்து வாகனம் மூலம் மாடவீதி வழியாக வந்து அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.  அங்கு மகாதீபம் ஏற்றும் தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சுமார் 5 அடி உயரமுள்ள, 200 கிலோ தூய செம்பு உலோகத்திலான தீப கொப்பரை வரும் 22ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பூஜை செய்யப்பட உள்ளது. பின்னர் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, 23ம் தேதி மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

by Mani Bharathi   on 21 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.