LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

திருவெம்பாவை

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் 
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 
பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் 
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் 
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் 
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156 
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை 
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157 
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ 
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ 
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் 
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே 
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் 
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் 
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து 
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158 
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் 
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் 
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் 
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் 
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) 
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் 
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159 
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை 
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 
வானே நிலனே பிறவே அறிவரியான் 
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் 
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160 
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் 
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் 
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் 
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும் 
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ 
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161 
கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் 
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் 
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் 
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை 
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162 
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே 
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் 
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து 
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் 
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் 
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163 
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் 
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் 
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் 
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் 
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் 
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் 
ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164 
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் 
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி 
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் 
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் 
மையார் தடங்கண் மடந்தை மணவாளர் 
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் 
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங் 
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165 
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் 
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் 
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும் 
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி 
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் 
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் 
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் 
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166 
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் 
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் 
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் 
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த 
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் 
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் 
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் 
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167 
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி 
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி 
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் 
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன் 
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168 
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் 
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர 
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் 
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் 
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் 
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் 
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி 
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169 
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் 
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் 
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் 
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் 
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் 
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு 
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே 
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170 
செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் 
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் 
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி 
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் 
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை 
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை 
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் 
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171 
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் 
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் 
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் 
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் 
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் 
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் 
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் 
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172 
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று 
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் 
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க 
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க 
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் 
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173 
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் 
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் 
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174 

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 

சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் 

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 

மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து 

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் 

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 

 

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் 

பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே 

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 

ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் 

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் 

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156 

 

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 

சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை 

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157 

 

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ 

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ 

எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் 

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே 

விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் 

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் 

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து 

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158 

 

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் 

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் 

பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் 

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் 

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) 

ஓலம் இடினும் உணராய் உணராய்காண் 

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159 

 

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை 

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 

வானே நிலனே பிறவே அறிவரியான் 

தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் 

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160 

 

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் 

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் 

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் 

என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும் 

சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ 

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் 

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161 

 

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் 

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் 

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 

வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் 

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை 

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162 

 

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 

பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே 

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் 

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து 

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் 

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் 

என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163 

 

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் 

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 

பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் 

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் 

ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் 

கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் 

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் 

ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164 

 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் 

கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி 

ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் 

செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் 

மையார் தடங்கண் மடந்தை மணவாளர் 

ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் 

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங் 

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165 

 

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் 

தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் 

கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும் 

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி 

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் 

ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் 

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் 

ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166 

 

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் 

அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் 

தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் 

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த 

பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் 

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் 

கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் 

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167 

 

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 

கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 

சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி 

சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி 

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் 

பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன் 

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168 

 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் 

சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர 

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் 

பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் 

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் 

ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் 

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி 

ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169 

 

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் 

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் 

மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் 

பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் 

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் 

தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு 

முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே 

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170 

 

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் 

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் 

கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி 

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் 

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை 

அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை 

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் 

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171 

 

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் 

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் 

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் 

தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் 

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் 

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் 

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் 

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172 

 

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று 

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் 

எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் 

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க 

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க 

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் 

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173 

 

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் 

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் 

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.