LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருஏசறவு

 

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் 
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் 
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் 
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546 
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு 
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை 
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் 
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547 
ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் 
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று 
ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் 
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548 
பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் 
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு 
எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன் 
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549 
கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் 
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் 
துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் 
பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550 
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு 
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் 
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை 
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551 
என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா 
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான் 
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட 
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552 
மூத்தானே மூவாத முதலானே முடியில்லா 
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் 
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் 
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553 
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் 
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப் 
பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு 
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554 
நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் 
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் 
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் 
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555 

 

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் 

கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் 

ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் 

பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546 

 

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு 

உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை 

மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் 

கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547 

 

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் 

ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று 

ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் 

பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548 

 

பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர் 

உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு 

எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன் 

சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549 

 

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் 

மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் 

துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் 

பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550 

 

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு 

நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் 

உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை 

அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551 

 

என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா 

தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான் 

அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட 

தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552 

 

மூத்தானே மூவாத முதலானே முடியில்லா 

ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் 

பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் 

பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553 

 

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் 

தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப் 

பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு 

அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554 

 

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் 

தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் 

தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் 

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.