உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் நேற்று (08.02.2016) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் ப. பத்மநாபன் வரவேற்றார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் மு.இளங்கோவன் தொடர்ப்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் தெ. முருகசாமி தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலின் காலம், அந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டியதன் தேவையைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார். செ.திருவாசகம் நன்றியுரை வழங்கினார். புதுசேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|