|
||||||||
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் |
||||||||
தமிழ் இலக்கிய வட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடத்திய தொல்காப்பியமும் திருக்குறளும்: களவியல், கற்பியல் இலக்கியக் கூட்டம் செப்டம்பர் 27, சனிக்கிழமை பிற்பகல் மேரிலாந்து மத்திய நூலகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. திரு. சுந்தர் குப்புசாமி, வாசிங்டன் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் இர. பிரபாகரன் சிறப்புரை மிகவும் சிறப்பாக இருந்தது. தொல்காப்பியத்தின் அதிகார அமைப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில் வரும் களவியல், கற்பியல் குறித்து விரிவான ஓர் உரையாற்றினார். அதை திருக்குறள் காமத்துப்பலுடன் ஒப்பிட்டு விளக்கம் அளித்தார். அவரது பேச்சு கருத்தாழம் மிக்கதாக இருந்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
பின்பு தமிழ்ச்சங்கத்தை சார்ந்த நண்பர்கள் திருக்குறள் காமத்துப்பால் குறித்து பல் சுவையான தகவல்களை ஒரு சிற்றுரையாக வழங்கினார்கள். விவரங்கள் வருமாறு:
இரா. பன்னீர்செல்வம்: தனிப்படர் மிகுதி; நினைந்து அவர் புலம்பல் இந்த இலக்கியக்கூட்டத்தை நாஞ்சில் பீற்றர் நெறிப்படுத்தினார். கூட்டத்தை வடிவமைத்து ஏற்படுகளை திரு. கொழந்தவேல் இராமசாமி சிறப்பாக செய்திருந்தார்கள். |
||||||||
by Swathi on 29 Sep 2014 1 Comments | ||||||||
Tags: Tolkappiyam Thirukkural Tamil literature Tamil Ilakkiyam Ilakkiya Vattam Dr.R.Prabakaran முனைவர் இர. பிரபாகரன் | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|