LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

தொல்காப்பியரின் புணர்ச்சிபற்றிய கோட்பாடுகள்

தொல்காப்பியர் முதலில் தமிழின் எழுத்துக்கள் (ஒலியன்கள் - Phonemes) பற்றிப் பொதுவாகப் பேசுகிறார் (''நூன்மரபு'').
 
அடுத்து, அந்த எழுத்துக்கள் சொல்லில் பயின்றுவரும்போது, எந்த எழுத்துக்கள் சொல் முதலில் வரும் , இறுதியில் வரும் (ஒரு சொல்லின் முதல் அசையில் - Linguistic Syllable - தொடக்கமாக - Onset- அல்லது உச்சியாக - Peak - எந்த எழுத்து வரலாம், சொல்லின் இறுதி அசையில் எந்த எழுத்து அசை உச்சியாக - Peak - அல்லது ஒடுக்கமாக - Coda வரலாம்) என்பதைக் கூறுகிறார் .
 
அதுபோன்று சொல்லில் இடையில் எந்த மெய் எழுத்தோடு எந்த மெய் எழுத்து அடுத்து வரும் (Phonotactics - மெய்மயக்கம்) என்பதைக் கூறுகிறார். அதாவது ஒரு அசையின் இறுதி மெய் எந்த எழுத்தாக இருந்தால், அதற்கு அடுத்த அசையின் அசையின் முதல் எழுத்து எதுவாக இருக்கவேண்டும் என்பதை விளக்குகிறார். இந்த அடிப்படையே தமிழ் இலக்கணத்தின் உடம்படுமெய் கோட்பாட்டிற்கு அடிப்படையாகும் (''மொழிமரபு'') . தமிழின் மெய்மயக்க விதிகளைப் ''பாதுகாக்கும் பணி'' புணர்ச்சிக்கு உள்ளதை என்பதையும் இங்கு நாம் உணரவேண்டும்.
அதற்கு அடுத்து மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பாக்கம்பற்றிப் (Phonetics) பேசுகிறார் (''பிறப்பியல்'') . மெய்மயக்கங்கள், பிற புணர்ச்சி விதிகள் ஆகியவற்றிற்கு மிக அடிப்படையானது எழுத்துக்களின் பிறப்பு இயக்கம்.
அதற்கு அடுத்த இயல்களில் எழுத்துக்கள் தொடர்களில் பயின்றுவரும்போது, சொற்களுக்கு இடையில் நிலவும் தொடர்பை விளக்குவதற்காகப் பயின்றுவரும் சந்தி அல்லது புணர்ச்சிபற்றிப் பேசுகிறார். மேலும் இரண்டு சொற்கள் இணைந்துவரும் தொகைகளிலும் புணர்ச்சியின் செயல்பாடுபற்றிக் கூறுகிறார்.
நிலைமொழியின் இறுதி எழுத்து , வருமொழியின் முதல் எழுத்து ஆகியவற்றின் அடிப்படையிலும் நிலைமொழியின் இலக்கணவகைப்பாடு, வருமொழியின் இலக்கணவகைப்பாடு ( Parts-of-Speech / Word Class Category) ஆகியவற்றின் அடிப்படையிலும் விளக்குகிறார்.( ''புணரியல் - குற்றியலுகரப் புணரியல்'')
தொடரில் அமையும் பெயர்களுக்கும் அத்தொடரில் வருகிற வினைகளுக்கும் இடையில் உள்ள தொடரியல் உறவுகள் (Syntactics relations) அடிப்படையையும் - அல்வழி , வேற்றுமை உறவுகளையும் - கணக்கில் கொண்டு புணர்ச்சியை விளக்குகிறார்.
ஆங்காங்கே சொற்களின் பொருண்மைக்கும் (Semantics) பங்கு உண்டு என்பதைக் கூறிச் செல்கிறார். அந்தச் சொற்களை இனம் கண்டு கூறுகிறார்.
இவ்வாறு எழுத்து, மெய்மயக்கம், சொல் வகைப்பாடு, தொடரியல் உறவு, பொருண்மையியல் அடிப்படை ஆகியவை எல்லாம் எவ்வாறு புணர்ச்சியில் பங்குகொள்கின்றன என்பதை விளக்குகிறார்.
இதில் மொழியசைக்கும் (Linguistic Syllable) முக்கியப் பங்கு உண்டு என்றாலும் அதை நேரடியாகச் சொல்லாமல், மெய்மயக்கங்களிலேயே அடக்கிக்கொள்கிறார்.
எனவே புணர்ச்சி என்பது ஒரு தொடர் அல்லது சொல்லின் பல்வேறு பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். வெறும் எழுத்து அடிப்படையைமட்டும் சார்ந்தது இல்லை புணர்ச்சி என்பதைத் தொல்காப்பியர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். மிகவும் வியக்கத்தக்க இலக்கணத் தெளிவு தொல்காப்பியருக்கு என்பது இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.
தொல்காப்பியரின் இந்த ஆய்வுமுறையும் இயல் வைப்பும் நம்மை வியக்கவைக்கிறது.
 
-தெய்வ சுந்தரம் நயினார்
 
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.