அமெரிக்காவிற்கு வருபவர்கள் தகுதி அடிப்படையில் வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எல்லை விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். நாம் கடினமாக இருக்கிறோம். நம் நாட்டிற்கு வருபவர்கள் சட்டப்பூர்வமாக வர வேண்டும். சட்டவிரோதமாக வரக்கூடாது. அவர்கள், தகுதி அடிப்படையில் வர வேண்டும்.
இது இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உதவும். அமெரிக்காவில் ஏராளமான கார் நிறுவனங்கள் வந்துள்ளன. இதனால், நம்நாட்டிற்கு வருபவர்கள் தகுதி அடிப்படையில் வர வேண்டும். நமக்கு உதவுபவர்கள் தான் வர வேண்டும். இது முக்கியம்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்
|