|
||||||||
சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு முறைகள் |
||||||||
சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்:
1) திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work)
2) விழிப்பு நிலை (Awareness)
3) தற்சோதனை (Introspection).
திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work):
***********************
இவற்றில், விளைவைக் கணித்து அதற்கு ஏற்ற அளவிலும் முறையிலும் மனம், மொழி, செயல்களைப் பயன்படுத்தலே "திட்டமிட்டுச் செயல்புரிதலாகும்".
விழிப்பு நிலை (Awareness) :
************
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றால் உணர்ச்சிவயப்படாது தன்னையும் தான் அடையவேண்டிய பயனையும் மறவாத விழிப்பு நிலையிலே செயலாற்றும் திறன் தான் "விழிப்பு நிலையாகும்".
தற்சோதனை (Introspection) :
***********
ஒவ்வொரு செயல் முடிவிலும் விளைவைக் கணித்து, தான் செய்த முறை அதில் விளைந்த தவறுகள் அல்லது நன்மைகள், இவற்றைச் சிந்தித்து உணர்வது; ஒவ்வொரு நாளும் இரவு படுக்குமுன், அன்று தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைவிற்குக் கொண்டுவந்து தன் செயல்களைச் சோதிப்பது; செயலில் தவறு கண்டால் இனி அத்தவறு ஏற்படாத உறுதி கொள்வது; நலமாக இருந்தால் அந்த முறையை அழுத்தமாக மனதில் பதிவு செய்துகொள்வது; இவை அனைத்தும் இணைந்த முறையே அகத்தாய்வுச் செயலாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்: 1) திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work) 2) விழிப்பு நிலை (Awareness) 3) தற்சோதனை (Introspection).
திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work): *********************** இவற்றில், விளைவைக் கணித்து அதற்கு ஏற்ற அளவிலும் முறையிலும் மனம், மொழி, செயல்களைப் பயன்படுத்தலே "திட்டமிட்டுச் செயல்புரிதலாகும்".
விழிப்பு நிலை (Awareness) : ************ தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றால் உணர்ச்சிவயப்படாது தன்னையும் தான் அடையவேண்டிய பயனையும் மறவாத விழிப்பு நிலையிலே செயலாற்றும் திறன் தான் "விழிப்பு நிலையாகும்". தற்சோதனை (Introspection) : *********** ஒவ்வொரு செயல் முடிவிலும் விளைவைக் கணித்து, தான் செய்த முறை அதில் விளைந்த தவறுகள் அல்லது நன்மைகள், இவற்றைச் சிந்தித்து உணர்வது; ஒவ்வொரு நாளும் இரவு படுக்குமுன், அன்று தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைவிற்குக் கொண்டுவந்து தன் செயல்களைச் சோதிப்பது; செயலில் தவறு கண்டால் இனி அத்தவறு ஏற்படாத உறுதி கொள்வது; நலமாக இருந்தால் அந்த முறையை அழுத்தமாக மனதில் பதிவு செய்துகொள்வது; இவை அனைத்தும் இணைந்த முறையே அகத்தாய்வுச் செயலாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 18 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|