LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறள் கெத்ய சங்கிரகம் -எ காமாட்சி குட்டியம்மா

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-11

நாள்: 05/05/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள் கெத்ய சங்கிரகம்
நூலாசிரியர்: எ காமாட்சி குட்டியம்மா

'திருக்குறள் கெத்ய சங்கிரகம்' என்னும் மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்நூல், திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளின் சுருக்கமாக அமைகிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆசிரியர் காமாட்சி குட்டியம்மா, தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தந்து அவ்வதிகாரத்தின் பொருளை மலையாள கலாச்சாரப் பண்பாட்டோடு விளக்கிக் கூறுவதாக இந்நூல் அமைகிறது. இன்பத்துப்பால் குறித்த செய்திகள் இல்லை. இந்நூலை 2010ஆம் ஆண்டு, கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி

கேரளப் பல்கலைக்கழகத்தில், தமிழ் முதுகலை படித்து, அப்பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்டமும் பெற்ற இவர், பிறகு அங்கேயே உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் பெற்றார். சிலகாலம் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். "வீர சோழிய நேமிநாதம்: ஓர் ஒப்பாய்வு" என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வேடாகும். இவர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர். ஒப்பீட்டு நோக்கில் இலக்கண சிந்தனைகள் (2008), தமிழ்-வடமொழி இலக்கண உறவு (2011), சமத்துவ பேராசிரியர் நாச்சிமுத்து (2015) என்பன இவரது நூல்களில் சிலவாம். சேரசெந்தமிழ் இலக்கியம் (இரண்டு தொகுதிகள்-2019) மற்றும் பெண் தெய்வங்கள் (மூன்று தொகுதிகள்-2021) ஆகியன இவர் பதிப்பித்த நூல்களாகும். 2017ம் ஆண்டு சிறந்த ஆய்வு கட்டுரைக்கான 'பாரதி தமிழ் செம்மல் விருது' மற்றும் கவியரசு கண்ணதாசன் 'ஆய்வுச் செம்மல் விருது' என்பன இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.